districts

திறன்மிகு வகுப்பறை துவக்கம்

அறந்தாங்கி, ஆக.16-

     புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு பல்  வகை தொழில்நுட்பக் கல்லூரியில் அனைத்துத் துறை  முன்னாள் மாணவர்கள் மற்றும் முன்னாள் மின்னணு வியல் மற்றும் தொடர்பியல் துறை மாணவர்களின் பங்க ளிப்பை கொண்டு நவீனமயமாக்கப்பட்ட திறன்மிகு வகுப்பறை திறப்பு விழா நடைபெற்றது.  

     விழாவிற்கு கல்லூரி முதல்வர் எஸ்.குமார் தலைமை ஏற்று உரையாற்றினார். மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை தலைவர் ஜெயக்குமார் துவக்க உரை யாற்றினார். பச்சலூர் அரசு நடுநிலைப்பள்ளி தலைமை  ஆசிரியர் முனைவர் பி.ஜோதிமணி சிறப்புரையாற்றினார். 1997- 2000 ஆம் ஆண்டு பயின்ற மின்னணுவியல் மற்றும்  தொடர்பியல் துறை மாணவர்கள் அறிமுக உரையாற்றி னர்.