districts

img

வீடும் நாடும் பயன்பெறும் வகையில் கல்வி அமைய வேண்டும்

புதுக்கோட்டை, செப்.11 - வீடும், நாடும், உலகமும் பயன்பெறும் வகையில் கல்வி அமைய வேண்டும் என்றார்  கவிஞர் நா.முத்துநிலவன்.  புதுக்கோட்டையை அடுத்த கைக்குறிச்சி  ஸ்ரீபாரதி மகளிர் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகளை தொடங்கி வைத்து அவர் பேசியதாவது:  “கடின உழைப்பால் மட்டும் பலன் கிடைக்காது. உழைப்போடு, வேறுபட்ட சிந்த னைகளும் சேரும்போதுதான் பயன் தரும்.  ஒரு நாட்டின் அடையாளமாக கட்டுமான  வளர்ச்சியே முன் நிற்கிறது. இப்போதும் உலகம் முழுவதும்  கணினி மென்பொருள்-வன் பொருள் பொறியாளருக்கான தேவை அதிகரித்துக் கொண்டே  இருக்கிறது. தான்பெற்ற கல்வியால் வீடும், நாடும், உலகமும் பயன டையும்படி, கல்வி அமைய வேண்டும். குறிப்பாக, பெண்கள்  படிப்பதுதான் அவர்கள் வாழ்க்கையை முன்னேற்றும். பெற்றோர்கள் பெண் பிள்ளைகளுக்கு வேறு  சொத்து ஏதும் சேர்த்து வைக்க வேண்டிய தில்லை, கல்வியே மிகப்பெரிய சொத்தாக இருக்கும்” என்றார்.  வகுப்புகள் தொடக்க விழாவுக்கு, ஸ்ரீ பாரதி கல்விக் குழுமங்களின் தலைவர் குரு. தனசேகரன் தலைமை ஏற்றார். கல்லூரி முதல்வர் ச.திலகவதி வரவேற்றார். தாளாளர்  கனகராஜன், அறங்காவலர்கள் கிருஷ்ண மூர்த்தி, பஷீர் முகமது ஆகியோர் வாழ்த்திப்  பேசினர்.