districts

மாற்றுத்திறனாளி மாணவர் கல்வி உதவித்தொகையை உயர்த்த வலியுறுத்தல்

கும்பகோணம், ஆக.25-

     மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையை இரு மடங்காக உயர்த்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

     தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் மாற்றுத் திறனாளிகள் குறைதீர் கூட்டம் கும்பகோணம் சிறியமலர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கோட்டாட்சியர் பூர்ணிமா தலைமை வகித்தார். மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சாமிநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

    இதில் மாற்றுத் திறனாளிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசுகையில், கால் பாதித்த மாற்றுத் திறனாளிகளுக்கு இரு சக்கர வாகனம், மடக்கு சேர் உள்ளிட்ட உபகரணங்களை வழங்க வேண்டும்.

    அரசு நிதியில் கட்டப்படும் வணிக வளாகங்களில் 5 சதவீதமும், அரசுப் பணிகளில் 4 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்கி, அதை வரும் ஆண்டுக்குள் அமல்படுத்த வேண்டும். மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகையை இரண்டு மடங்காக உயர்த்தி வழங்க வேண்டும். தொகுப்பூதியத்தில் பணியாற்றுபவர்களுக்கு காலவரன்முறை ஊதியம் வழங்குவதற்கான அரசாணையை வெளியிட வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைச் சட்டம் குறித்து அனைத்து அலுவலர்களுக்கும் பயிற்சியளிக்க வேண்டும். தொடர்ந்து, நிலுவையில் உள்ள உதவித்தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினர்.