கரூர்,ஜன.11- கரூர் மாவட்டம்,கடவூர் வட்டாட்சியர் இடைத்தரகர்கள் மூலம் பல லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கும் போக்கினை கண் டித்தும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடவூர் வட்டக்குழு சார்பில் வியாழக்கிழமையன்று கடவூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப் பட்டது. போராட்ட அறிவிப்பை தொடர்ந்து, குளித்தலை கோட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் மா.ஜோதிபாசு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.ராஜூ, கே.சக்திவேல், பி.ராமமூர்த்தி, கடவூர் வட்ட செயலாளர் பி.பழனிவேல் ஆகியோர் கலந்து கொண்டனர். பேச்சு வார்த்தையில் கடவூர் வட்டாட்சி யரை கூடிய விரைவில் இடம் மாற்றம் செய்வதாக வாக்குறுதி அளித்ததின் அடிப் படையில் ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.