பேராவூரணி, மே 10-
தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் கடற்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, அண்ணா நகர் புதுத்தெரு கிராமத்தைச் சேர்ந்த குமார் (47) புதன்கிழமை அண்ணா நகர் புதுத்தெரு பகுதியிலிருந்து சுமார் 3 நாட்டிக்கல் கடல் மைல் தூரத்தில் மீன் பிடித்துக் கொண்டி ருந்தார்.
அப்போது திடீரென மயங்கி கடலுக்குள் தவறி விழுந்தார். பிறகு அவர் கடலில் மிதந்ததை கண்ட, அருகி லேயே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் அவரை மீட்டு கடற்கரைக்கு கொண்டு வந்து பார்த்தபோது அவர் இறந்துவிட்டது தெரியவந்தது.
இதுகுறித்து, சேதுபாவாசத்திரம் கடற்கரை காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறை யினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.