districts

தொழிலாளர்கள் விரோத சட்டங்களை கைவிடுக! அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை, மார்ச் 16 - மயிலாடுதுறை மாவட் டம் பொறையார் பழைய பேருந்து நிலையம் அருகில்  ஒன்றிய மோடி அரசின் மக்கள் விரோத, தொழிலா ளர் விரோத கொள்கைகளை கண்டித்து அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் பிரச்சார இயக்க ஆர்ப்பாட்டம் செவ்வாயன்று நடைபெற்றது.  ஐஎன்டியுசி ராமச்சந்தி ரன் தலைமையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிஐடியூ மாவட்ட செயலா ளர் ஆர்.ரவீந்திரன், தொமுச  பொன்.நக்கீரன், சிஐடியூ மாவட்ட தலைவர் சீனி.மணி,  மீன்பிடி சங்க மாவட்ட செய லாளர் அம்மையப்பன், அரசு  போக்குவரத்து கழக பொறை யார் பணிமனை கிளை செயலாளர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் உரையாற்றி னர். மயிலாடுதுறையில் மின்வாரிய அலுவலகம், நவீன அரிசி ஆலை, போக்கு வரத்து பணிமனை உள்ளிட்ட இடங்களிலும் பிரச்சார இயக்கம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.