புதிய மின்சார திருத்த சட்டத்தை கண்டித்து ஒன்றிய அரசுக்கு எதிராக அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்சார வாரிய தலைமையகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொமுச மாநில பொதுச்செயலாளர் மணிமாறன் தலைமை வகித்தார். தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச் செயலாளர் எஸ் ராஜேந்திரன் உள்ளிட்டோர் பேசினர்.