districts

திருச்சி முக்கிய செய்திகள்

பட்டா கோரி போராட்டம்

பாபநாசம், பிப்.26 - தஞ்சாவூர் மாவட்டம்  பாபநாசம் அருகே அரை யபுரம் தட்டுமால் படுகை யில் சாகுபடி செய்து  வரும் 400-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு 1999  உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி, ரயத்து வாரியாக மாற்றம் செய்து பட்டா  வழங்க வலியுறுத்தி போராட்டம் நடை பெற்றது. பாபநாசம் அர சலாறு முனீஸ்வரர்கே ாயில் அருகில் நடந்த தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் சாமு. தர்மராஜன், பரம சிவம், ஏஐடியுசி மாநிலச்  செயலாளர் தில்லை வனம், சிபிஐ ஒன்றியச் செயலர் சேகர், பொய் யாமொழி, புகழேந்தி உள்பட பல விவசாயிகள் பங்கேற்றனர்.

மக்கள் குறைதீர் கூட்டம்

மயிலாடுதுறை, பிப்.26 - மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக கூட்ட  அரங்கில் மாவட்ட ஆட்சி யர் ஏ.பி.மகாபாரதி  தலை மையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. மாவட்டத் தின் பல்வேறு கிராமங் களைச் சேர்ந்த பொது மக்கள் ஆட்சியரிடம் மனுக்களை அளித்தனர். மொத்தம் 344 மனுக்கள் பெறப்பட்டன. மனுக் களை மாவட்ட ஆட்சியர்  சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்ப டைத்து, உரிய நடவ டிக்கை எடுக்க உத்தர விட்டார். மேலும், எடுக் கப்பட்ட நடவடிக்கை குறித்த விபரத்தை மனு தாரர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத் தினார்.

குடிநீர் குழாயில் உடைப்பு  6 மாதமாக வீணாகும் குடிநீர்

அரியலூர், பிப்.26- அரியலூர் மாவட்டம் தா.பழூர் கொள்ளிடம் ஆற்றில் இருந்து, கொள் ளிடம் கூட்டுக் குடிநீர்  திட்டத்தின் மூலம் ஆண்டிமடம் பகுதிக்கு குழாய் அமைக்கப் பட்டு குடிநீர் வழங்கப் படுகிறது.  ஜெயங்கொண்டம்-தா.பழூர் சாலையில் ஜெயங்கொண்டம் பிள் ளையார் கோயில் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள இந்த குடி நீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக குடிநீர் வீணாகிறது. இதன் மூலம் குடிநீர் பெறக் கூடிய கிராமங்களில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசின் முக்கிய அதிகாரிகள் இவ்வழியாக சென்று வந் தாலும், குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்ய யாரும் முன்வர வில்லை. இந்நிலை நீடித் தால் சாலையில் பள்ளம் ஏற்பட்டு, குடிநீருடன் சாக்கடை நீர் கலந்து விடும்.  குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை தமிழ்நாடு குடிநீர் வடி கால் வாரியம் மற்றும் நக ராட்சி நிர்வாகம் உடனே சரிசெய்ய வேண்டும் என  அப்பகுதி மக்கள் கோ ரிக்கை விடுத்துள்ளனர்.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு: சிபிஎம் ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு

பாபநாசம், பிப்.26- பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை யடுத்து, சிபிஎம் ஆர்ப்பாட் டம் ஒத்திவைக்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை மதகடி பஜார் பகுதியில் கட்டப்பட்டு வரும் சிறு பாலத்தை உடனே கட்டி முடித்து போக்குவரத்தை சீர்செய்ய கோரியும், அய்யம்பேட்டை பேரூராட்சியின் அவல நிலையை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்தது. இந்நிலையில், பாப நாசம் வட்டாட்சியர் அலுவல கத்தில் அமைதி பேச்சு வார்த்தை கூட்டம் நடை பெற்றது. இதில் சிறு பாலப் பணிகள், அதையொட்டிய சாலையை 15.3.2024-க்குள் முடிப்பது. எருத்துக்கார தெரு, பாக்குத்தோப்பு தெரு  உள்ளிட்ட தெருக்களை தற்காலிகமாக செப்பனிடு வது. அய்யம்பேட்டை மருத்துவமனையில் காலிப்  பணியிடங்களை நிரப்பி,  செவிலியர்கள் எண்ணிக் கையை அதிகரிப்பது, ஸ்கேன், எக்ஸ்ரே வசதிகள் ஏற்படுத்த சுகாதாரத் துறை இணை இயக்குநருக்கு கடிதம் அனுப்புவது, பெரிய  தைக்கால் தெருவில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத் தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.15 லட்சம் நிதியின்கீழ் பணிகளை துவங்கிட நடவ டிக்கை எடுப்பது என முடிவு  செய்யப்பட்டது. அதனடிப்படையில் ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இதில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற் குழு உறுப்பினர் காதர் ஹுசைன், ஒன்றியச் செயலா ளர் முரளிதரன், பாபநாசம் நகரச் செயலாளர் சங்கர், அய்யம்பேட்டை நகரச் செய லாளர் ஷேக் அலாவுதீன், மாதர் சங்கம் கஸ்தூரி பாய்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மாவட்ட திட்டக் குழுவால் எந்தப் பலனும் கிடையாது! கவுன்சிலர் குற்றச்சாட்டு

அரியலூர், பிப்.26- மாவட்ட திட்டக் குழுவால் எந்தப் பலனும்  கிடையாது என்று அரியலூர் மாவட்ட ஊராட்சிக் குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினர். அரியலூர் மாவட்ட ஊராட்சிக் குழுக் கூட்டம் பல்துறை  வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு  மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் பொ.சந்திர சேகர் தலைமை வகித்தார். செயலர் சி.தமிழ்மணி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கவுன்சிலர் அன்பழகன்  பேசுகையில், “மாவட்ட திட்டக் குழு உருவாக்கப்பட்டு இதுவரை எந்தவித வளர்ச்சித் திட்டப் பணிகளும் நடை பெறவில்லை. தொடர்ந்து கூட்டத்தில் வலியுறுத்தி வந்தா லும், எந்த கோரிக்கையும் நிறைவேறவில்லை. எனவே  இந்த திட்டக் குழுவால் எந்தப் பலனும் கிடையாது” என்றார். இதில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து  ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் அனைத்து  கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.

வனத்துறையினருக்கு பயிற்சி

தேனி, பிப்.26- தேனி மாவட்ட வன அலுவலகத்தில் வனத்துறையி னருக்கு முதலுதவி சிகிச்சை வழங்குவது தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டது.  நிகழ்ச்சிக்கு மாவட்ட வன அலுவலர் ஜெ.ஆர்.சமர்த்தா தலைமை வகித்தார். தேனி உதவி வனப்பாது காவலர் சிசில் கில்பட் முன்னிலை வகித்தார். தீ தடுப்பு மற்றும் மேலாண்மை திட்டத்தின் கீழ் வனப் பகுதியில் தீ நிகழ்வு ஏற்படும் போது, விபத்தில் சிக்கிக்  கொண்டால் எவ்வாறு முதலுதவி செய்வது குறித்து அரசு  மருத்துவர் பயிற்சி வழங்கினார். மேலும் தீயணைப்பு துறையினர் தீயை எவ்வாறு கையாளுவது குறித்தும் பயிற்சி அளித்தனர். மேலும் வல்லுனர் குழுவினர்களால் தீயை அணைப்பது குறித்து வனப் பணியாளர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.

போக்சோவில் இளைஞர் கைது

திண்டுக்கல், பிப்.26- பள்ளி மாணவியை கடத்தியதாக இளைஞர் போக்சோ  சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.  திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகேயுள்ள குருநாதநாயக்கனூர் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் கரு ணாகரன். இவர் 11-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாண வியை காதலித்து வந்துள்ளார்.  இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்றதாக மாணவியின் பெற்றோர் கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், வேடசந்தூர் காவல்துறையினர் கருணாகரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மாணவி பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார். 

நிலக்கோட்டையில் நீதிமன்றம் கட்ட வலியுறுத்தல்

சின்னாளப்பட்டி, பிப்.26- திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் வழக்கறி ஞர்கள் சங்க ஆலோசனை கூட்டம் மூத்த வழக்கறிஞர் இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது.  கூட்டத்திற்கு செயலாளர் சி.வி.கே.கோகுல்நாத், இணைச் செயலாளர் ராஜா, பொருளாளர் வேந்தன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் சங்கர்  வரவேற்றார். வழக்கறிஞர் மணிகண்டன் நன்றி கூறி னார். கூட்டத்தில், நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்ட புதிய ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டுவதற்கான நடவ டிக்கையை விரைவுபடுத்த வேண்டும், அதற்காக வட்டாட் சியர், மாவட்ட ஆட்சியரை சந்திக்க முடிவு செய்யப்பட் டது. பெண் வழக்கறிஞர்களுக்கு ஓய்வறை உள்ளிட்ட வசதிகளை செய்து தர வேண்டும், ‘வட்டார வழக்கறி ஞர் சங்கம்’ என்ற பெயரை ‘வழக்கறிஞர்கள் சங்கம்  நிலக்கோட்டை’ என பெயர் மாற்றம் செய்ய வேண்டும்  உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்திற்கு வழக்கறிஞர்கள் சங்க கௌரவத் தலை வர் கருப்பையா, ஆலோசகர்கள் தங்கராஜ், எம்கே.ராணி கணேசன், மாதவராஜன், சிவபிரகாஷ், அம்மை யப்பன், சண்முகா தேவி, சந்திரன், கோபிநாத் உட்பட பலர்  கலந்து கொண்டனர்.

இலவச வீட்டு மனை பட்டா கேட்டு  காத்திருப்பு போராட்டம்

இலவச வீட்டு மனை பட்டா கேட்டு  காத்திருப்பு போராட்டம்  தென்காசி, பிப். 26 தென்காசி மாவட்டம் இடைகாலில் திங்கட்கிழமை அன்று  கிராம நிர்வாக அலுவலகம் முன்பு இலவச வீட்டு மனை பட்டா கேட்டு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது . போராட்டத்திற்கு  6-வது வார்டு கவுன்சிலர் மாரி செல்வி  தலைமை   வகித்தார் . அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட ஒருகினைப்பாளர் ஆயிஷா பேகம்,  சிபிஎம் மாவட்ட செயற்குழு  உறுப்பினர்  டி. கணபதி கோரிக்கைகளை விளக்கி பேசினர். செல்லத்துரை,  ஞான பிரகாசம்  பீட்டர், முருகையா மற்றும் 60 பெண்கள்  கலந்து  கொண்டனர்.  அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் தேர்தலுக்கு பிறகு தகுதியானவர்களுக்கு கண்டிப்பாக வீட்டு பட்டா வழங்கப்படும் என்று  எழுத்து மூலம் உறுதி  தரப்பட்டது. போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப் பட்டது.

கனிம வள லாரியால் ஆம்னி பேருந்து விபத்து- 5-பேர் படுகாயம்

குழித்துறை,பிப்.26- சென்னையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு வந்த தனியார் ஆம்னி பேருந்து ஒன்று மார்த்தாண்டம் பகுதியில்.சென்று கொண்டிருந்தது, அப்போது கனிம வள லாரி ஒன்று முன்னால் சென்று கொண்டிருந்துள்ளது, அந்த லாரியை முந்தி சொல்ல ஆம்னி பேருந்து ஓட்டுநர் பலமுறை முயற்சி மேற்கொண்டு உள்ளார். ஆனால் கனிம வளத்தை ஏற்றிச் சென்ற லாரி ஓட்டுநர் வழி கொடுக்காமல், பேருந்தை முன்னால் விடாமல் ஓட்டி சென்றுள்ளார். மேம்பாலத்தில் வைத்து ஆமினி பேருந்தை ஓட்டுநர் முன்னால்  எடுத்துச் செல்ல முயன்றுள்னார். ஆனால் கனிமவள லாரி ஓட்டுனர் வழி விடாமல் சென்று கொண்டு இருந்துள்ளார். குழித்துறை சந்திப்பு பகுதியில் வைத்து திடீரென கனிம வள லாரி ஓட்டுநர் பிரேக் பிடித்துள்ளார். இதனால் பின்னால் சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்து  கனிமவள லாரியில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் ஆமினி பேருந்தின் முன்பக்க கண்ணாடி முழுவதும் உடைந்து  விழுந்தது. ஆமினி பேருந்தில் இருந்த ஐந்து பயணிகளுக்கு காயம் ஏற்பட்டது. பொதுமக்கள் அவர்களை மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். இதை அடுத்து ஆமினி பேருந்து ஓட்டுநர்,பயணிகளுடன் சேர்ந்து, கனரக வாகன ஓட்டுனர் மற்றும் அங்கு குவிந்த  கனிமவள கும்பல்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து களியக்காவிளை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, ஆம்னி பேருந்து மற்றும் கனிம வள லாரியை களியக்காவிலக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். மேலும் ஆம்னி பேருந்து ஓட்டுநர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் புகார் பெறப்படாமல்  அங்கு பஞ்சாயத்து நடைபெற்றது. இச்சம்பவம் அங்கு பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய மற்றொரு இளைஞரும் சடலமாக மீட்பு

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய மற்றொரு இளைஞரும் சடலமாக மீட்பு அரியலூர், பிப்.26 - கொள்ளிடம் ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை மூழ்கிய 3 பேரில்  இருவர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், மற்றொரு இளை ஞரும் திங்கள்கிழமை சடலமாக மீட்கப்பட்டார். தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகேயுள்ள அம்மாள் கிராமத்தைச் சேர்ந்த அரவிந்தன் என்பவரின் குடும்ப  நிகழ்ச்சிக்காக, கடந்த இரு நாட்களுக்கு முன்பு வந்த  சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த 9 பேர், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அரியலூர் மாவட்டம் திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் குளித்தனர். இதில் சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த  சந்தானகிருஷ்ணன் (17), பச்சையப்பன் (17), தஞ்சாவூர் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த தீபக் (எ) தீனதயாளன் (21)  ஆகிய 3 பேர் நீரில் மூழ்கினர். தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற அரியலூர் தீய ணைப்பு மற்றும் மீட்புப் படையினர் ஆற்றில் இறங்கி தேடி யதில், சந்தானகிருஷ்ணன், பச்சையப்பன் ஆகியோர் சடல மாக மீட்கப்பட்டனர். மாலை 6 மணிக்கு இருள் சூழ்ந்த தால், தீபக்கை தேடும் பணி நிறுத்தப்பட்டது. இந்நிலையில், திங்கள்கிழமை காலை விருத்தாசலத்தி லிருந்து வந்த தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், ரப்பர் படகுடன் ஆற்றில் இறங்கி தேடியபோது, காலை 10 மணிய ளவில் தீபக் சடலமாக மீட்கப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக  திருமானூர் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரிக் கின்றனர்.

தேங்காய்பட்டணம் மீன்பிடித் துறைமுகப் பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை

நாகர்கோவில், பிப்.26- குமரி மாவட்டத்தில் மீன்படித் துறைமுகக் கோட்டத்தில்  நடந்துள்ள லஞ்ச ஊழல் மீதான வழக்கில் செயற்பொறியாளரையும் இணைத்து நடவடிக்கை எடுத்திட வேண் டும். தேங்காய்பட்டணம் மீன்பிடித் துறைமுக  வேலையை திட்டமிட்டபடி விரைந்து முடித்திட வேண்டும் போன்ற கோரிக்கை களை வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்ட மீன் பிடி  தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்பில்  தேங்காய்பட்டணம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகம் முன்பு‌ கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் வழியாக இயக்குநருக்கு மனு  அளிக்கப்பட்டது. அந்த மனுவில் கூறப் பட்டுள்ளதாவது:  குமரி மாவட்டத்தில் மீன்பிடித் துறை முகக் கோட்டத்தில் நடந்துள்ள லஞ்ச ஊழல் மீதான வழக்கில் அத்துறையின் பொறுப்பு அதிகாரியான செயற்பொறியாளரையும் இணைத்து நடவடிக்கை எடுக்கவும், தகுதியான நல்ல அதிகாரியை அந்தப் பொறுப்பில் அமர்த்தி தேங்காய்பட்டணம் துறைமுக வேலையை திட்டமிட்டபடி விரைந்து முடித்திடவும் வேண்டும்.‌ அதிக அளவில் மண்ணெண்ணெய் இயந்திரங்களை பயன்படுத்தும் பகுதியாக கன்னியாகுமரி மாவட்டம் உள்ளது. ஆனால்  மண்ணெண்ணெய் வாங்க எந்த வழிவகை யும் இல்லை. அரசு அளிக்கும் மானிய  எண்ணெய் மட்டுமே ஒரே வழியாக இருக் கிறது. ஆனால் மானிய மண்ணெண் ணெய்க்கு விண்ணப்பித்து காத்திருப்போ ரின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இதனால் மீனவர்கள் தொழிலுக்கு செல்ல இயலாத நாட்கள் கூடிக் கொண்டே செல் கிறது. மண்ணெண்ணெய் பற்றாக்குறையை நீக்க மீனவர்களுக்குத் தருகின்ற மண்ணெண் ணெய் அளவைக் கூட்ட வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு தலை வர் ஜி.செலஸ்டின் தலைமை தாங்கினார். போராட்டத்தை விளக்கி சிபிஎம் மாவட்ட செயலாளர் ஆர்.செல்லசுவாமி, சிஐடியு மாவட்ட செயலாளர் கே.தங்கமோகன், மீன்பிடி  தொழிற்சங்க கூட்டமைப்பு மாநில செய லாளர் எஸ்.அந்தோணி, மீன் தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் அலெக்சாண்டர் ,மாவட்ட பொருளாளர் பிராங்கிளின் ஆகி யோர் பேசினார்கள். இதில் மீன்பிடி தொழிலா ளர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

வருவாய்த்துறை அலுவலர்கள் 3 ஆம் நாளாக காத்திருப்பு போராட்டம்

தஞ்சாவூர், பிப்.26 -  பத்து அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற‌க் கோரி  வருவாய்த்துறை அலுவலர்கள் திங்களன்று மூன்றாம்  நாளாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில், பட்டியல் திருத்தத்தின் காரண மாக பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரி அல்லாத அலுவலர் களின் பணியிறக்கப் பாதுகாப்பு அரசாணையினை துணை வட்டாட்சியர் வெளியிட வேண்டும். வருவாய்  மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அலுவலர்களின்  பணித்தன்மையை கருத்தில் கொண்டு அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம்  அல்லது தனி ஊதியம் வழங்க வேண்டும். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் 3 ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள  அலுவலக உதவியாளர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். அனைத்து தாலுகாவிலும் சான்றி தழ் வழங்கும் பணிக்கென புதிய துணை வட்டாட்சியர் பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை தஞ்சா வூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தமிழ்நாடு வரு வாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் பணிகளைப் புறக் கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் சந்தன வேல் தலைமை வகித்தார். வட்டச் செயலாளர் ராக வேந்திர மூர்த்தி பிரவீன் முன்னிலை வகித்தார். அரசு  ஊழியர் சங்க வட்ட தலைவர் சங்கர் கணேஷ், செயற் குழு உறுப்பினர் தமிழ்வாணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  இதேபோல் மாவட்டத்தில் கோட்டாட்சியர், வட்டாட் சியர் அலுவலகங்களிலும் வருவாய்த்துறை ஊழியர் களின் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. அரியலூர் அரியலூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் நடை பெற்ற போராட்டத்துக்கு கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் பாக்கியம் விக்டோரியா தலைமை வகித் தார். இதேபோன்று அரியலூர், செந்துறை, ஜெயங் கொண்டம், ஆண்டிமடம் வட்டாட்சியரகங்கள் முன்பும் போராட்டம் நடைபெற்து.