districts

img

குடிநீர், சாலை வசதி செய்து தரவில்லை; வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டம்

திருச்சிராப்பள்ளி, ஜன.27- திருச்சி மாவட்டம் திருவெறும் பூர் அருகே உள்ள காருண்யா நகரில் 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி யில் குடிநீர், சாலை உள்ளிட்ட வச திக்கோரி மாவட்ட, மாநகராட்சி அதி காரிகளிடம் பலமுறை மனு கொடுத் தும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை.  இதையடுத்து இப்பகுதி மக்கள்  வீடுகளில் கருப்பு கொடி கட்டி, குடியரசு தினவிழாவை புறக் கணித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.   இதுகுறித்து தகவலறிந்த திருவெறும்பூர் காவல்துறையினர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி னர். இதில் விரைவில் இப்பகுதி யில் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்துத் தரப்படும் என உறுதியளித்தனர். பின்னர் போராட்டம் கைவிடப் பட்டது.