பாபநாசம், ஜன.19 - கும்பகோணம் - தஞ்சாவூர் மெயின் சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்தச் சாலையில் பாபநாசம் திருப்பாலைத்துறையில் இருந்து, 108 சிவாலயம் வரை போக்குவரத்து நெரிசல் அதிகம். இந்தச் சாலை கடந்த கும்பகோணம் மகா மகத்திற்கு முன்னர் போடப்பட்டது. அதன் பின்னர் இந்தச் சாலை குண்டும், குழியுமான நிலையில் பேட்ச் ஒர்க் மட்டுமே நடந்தது. தற்போது சாலையோரம் மழைநீர் வடிகாலுடன் சாலை போடப்பட்ட நிலையில், பாபநாசம் மெயின் சாலை யோரம் கட்டப்பட்ட மழைநீர் வடிகால் பணி முழுமைப் பெறாமல், ஆங்காங்கே பள்ளமாக இருந்தது. இதனால் பாபநாசம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிரம மடைந்து வருவதாகவும், பள்ளத்தில் மழைநீர் தேங்கி நிற்பதாகவும் தீக்கதிர் நாளிதழில் டிச.17 செய்தி வெளி யானது. இதையடுத்து மெயின் சாலையோரம் இருந்த பள்ளம் சீர் செய்யப்பட்டு, மழை நீர் வடிகால் அமைக்கப் பட்டது. இதுகுறித்து செய்தி வெளியிட்ட தீக்கதிர் நாளி தழுக்கு பாபநாசம் பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.