districts

img

புதுக்கோட்டையில் இருந்து டாக்டர் முத்துலட்சுமி நினைவுச் சுடர் புறப்பாடு

புதுக்கோட்டை, ஆக.31 - தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்கத்தின் சார்பில் சென்னையில் நடைபெறும் சனாதன ஒழிப்பு மாநாட்டை முன்னிட்டு, புதுக்கோட்டையில் இருந்து டாக்டர் முத்துலட்சுமி அம்மையாரின் நினைவுச் சுடர் கொண்டு செல்லப்படுகிறது.  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பாக சனாதன ஒழிப்பு மாநாடு சென்னை காமராஜர் அரங்கில்  செப்.2 (சனிக்கிழமை) அன்று நடைபெறு கிறது. அதனையொட்டி சமூக நீதிப் போராளியும், இந்தியாவின் முதல் பெண் மருத்துவருமான டாக்டர் முத்துலட்சுமி அம்மையாரின் நினைவாக, அவர் பிறந்த ஊரான புதுக்கோட்டையில் இருந்து நினைவுச் சுடர் புறப்பட்டது.  புதுக்கோட்டை திலகவதியார் ஆதின மடத்தில் உள்ள டாக்டர் முத்துலட்சுமி அம்மையாரின் சிலை அருகில் இருந்து  தொடங்கிய நினைவுச் சுடரை, கந்தர்வ கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர்  எம்.சின்னதுரை வழங்க தமிழ்நாட்டின் முதல் பெண் ஆட்டோ ஓட்டுநர் புதுக்கோட்டை  சரோஜா பெற்றுக் கொண்டார்.   இந்நிகழ்விற்கு தமுஎகச மாவட்டத் தலைவர் ராசி.பன்னீர்செல்வன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் ஆர். நீலா, மாநிலக் குழு உறுப்பினர்கள் ஜீவி, தனிக்கொடி ஆகியோர் வாழ்த்துரை ஆற்றி னர். முன்னதாக மாவட்டச் செயலாளர் எம். ஸ்டாலின் சரவணன் வரவேற்க, பொருளா ளர் கி.ஜெயபாலன் நன்றி கூறினார். தமுஎகச, அறிவியல் இயக்கம், மாணவர் சங்க  நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.