திண்டுக்கல், ஏப்.6- திமுக தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி சார்பில் திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தத்திற்கு ஆதரவாக திண்டுக்கல் பகுதியில் ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் வாக்கு சேகரிக்க கள மிறங்கியுள்ளன. சனிக்கிழமையன்று திண்டுக்கல் நகர் மருதாணிக்குளத்தில் வாக்கு சேகரிக்கப்பட்டது. இதில், சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.பிரபாகரன், நகரச் செயலாளர் ஏ.அரபுமுகமது, திமுக நகரச் செயலாளரும் துணை மேயருமான ராஜப்பா, மாமன்ற உறுப்பினர்கள் கே.எஸ்.கணேசன், சுவாதி, மதிமுக ரியல் ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.