புதுக்கோட்டை, பிப்.28 - புதுக்கோட்டையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வட்டாட்சியரின் குடும்பத்தினர் தனது மகனின் முதலாமாண்டு நினைவுநாளை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ரூ.50,000 நிதி வழங்கினர். புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் ப.சிவ குருநாதன். பணிநிறைவு பெற்ற வட்டாட்சி யர். அரசு ஊழியர் சங்கத்தில் முன்னணி ஊழியராகப் பணியாற்றியவர். இவரது இணையர் பானுமதி ஜனநாயக மாதர் சங்கத் தில் மாவட்டச் செயலாளராகப் பணியாற்றி யவர். இவர்களது மூத்த மகனும், சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞருமான அ.மு.வால்கா-வின் கண வரும், தமுகஎச மாநில துணைத் தலைவர் நா. முத்துநிலவனின் மரு மகனுமான பொறியா ளர் சிவ.அன்புச்செழி யன் கடந்த ஆண்டு பிப்.27 அன்று உடல்நலக்குறைவால் காலமா னார். இந்நிலையில், அவரது முதலாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சிவ.அன்புச்செ ழியனின் படத்திறப்பு செவ்வாய்க்கிழமை புதுக்கோட்டையில் உள்ள அவரது இல்லத் தில் நடைபெற்றது. படத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா ளர் எஸ்.கவிவர்மன் திறந்து வைத்தார். அவரிடம் கட்சி வளர்ச்சி நிதியாக ரூ.50 ஆயி ரத்தை குடும்பத்தினர் வழங்கினர்.