திருவாரூர் மாவட்ட நிர்வாகத்தால் சிறப்பாக நடைபெற்று கொண்டிருக்கும் 2 ஆவது புத்தக திருவிழாவிற்கு, குடவாசல் வர்த்தகர் சங்கம், கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் அதிபர்களிடமிருந்து பெறப்பட்ட ரூ.1,05,000-க்கான காசோலை மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ-விடம் வழங்கப்பட்டது. திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, குடவாசல் வட்டாட்சியர் தேவகி மற்றும் மண்டல துணை வட்டாட்சியர் சரவணக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.