திருச்சிராப்பள்ளி, ஜூலை 24-
கல்மந்தை காலனி மக்களுக்கு ஐந்து ஆண்டுகளாக வீடு வழங்காமல் இழுத்தடிக் கப்படுகிறது. இதனை கண்டித்து சிபிஎம் தலை மையில் கல்மந்தை காலனி மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி கல்மந்தை பகுதியில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் அடுக்குமாடி கட்டுவதற்காக 60 ஆண்டு காலம் 3 தலைமுறை யாக குடியிருந்த வீடுகளை காலி செய்து கொடுத்த மக்களை ஏமாற்றுவதை கைவிட வேண்டும். கடன் பெற்று ரூ.1 லட்சம் கட்டி, 10 மாதம் ஆன நிலையில், 118 பேருக்கும் உடனே வீடுகள் வழங்க வேண்டும். இடிக்கப்பட்ட வீடு களில் இருந்தவர்களுக்கு, வீடுகள் வழங்கு வதில் ஏற்படும் குழப்பத்தை கைவிட வேண்டும்.
பொய் புகார்களை நம்பி விசாரணை என்று கூறி இழுத்தடிப்பதை கைவிட வேண்டும். மே 31-க்குள் விசாரணை நடத்தி வீடுகள் ஒதுக்கப் படும் என்ற அமைதிப் பேச்சுவார்த்தை முடிவை உடனே அமல்படுத்த வேண்டும். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு குடியிருந்து அரசால் இடிக்கப்பட்ட 118 ஏழை மக்களுக்கும் உடனே வீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு துறை அதிகாரி களின் மெத்தனப் போக்கால் ஐந்தாண்டு கால மாக ஏழை மக்கள் வாடகை வீட்டில் வாழும் நிலை ஏற்பட்டதை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் கல்மந்தை காலனி ஊர் பொதுமக்கள் திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் குடும்பத்தோடு காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்திற்கு சிபிஎம் கல்மந்தை கிளைச் செயலாளர் மகாலிங்கம் தலைமை வகித்தார். போராட்டத்தை விளக்கி சிபிஎம் மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா, மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் ரெங்கராஜன், கார்த்தி கேயன், மலைக்கோட்டை பகுதி செயலாளர் லெனின், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் சேதுபதி, மாநகராட்சி தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் மாறன் ஆகியோர் பேசி னர்.