districts

img

டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் மனு கொடுக்கும் போராட்டம்

பொதுமக்களை பாதிக்கும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை அனுமதிக்க கூடாது!

தஞ்சாவூர், டிச.12 -  பம்புசெட்டு விவசாயிகளுக்கு வழங்கி வரும் இலவச மின்சா ரத்தை கார்ப்பரேட் முதலாளி களுக்கு தாரை வார்க்கும் ஒன்றிய  மோடி அரசின் மோசடியான ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை தமிழ் நாடு அரசு நிராகரிக்க வேண்டு மென வலியுறுத்தி செவ்வாயன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் கண்டன  ஆர்ப்பாட்டம் மற்றும் மனு கொடுக் கும் போராட்டம் நடைபெற்றது. இதனொரு பகுதியாக, தஞ்சா வூர், திருவாரூர், மயிலாடுதுறை, அரியலூர், கரூர் உள்ளிட்ட டெல்டா  மாவட்டங்களிலும் போராட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர் மின்வாரிய மேற் பார்வை பொறியாளர் அலுவலகம் அருகில் நடந்த மனு கொடுக்கும் போராட்டத்திற்கு, விவசாயிகள் சங்க தஞ்சை ஒன்றியச் செயலா ளர் எஸ்.கோவிந்தராஜ் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் சாமி.நடராஜன் கண்டன உரை யாற்றினார்.

சிபிஎம் மாநகரச் செயலாளர் எம்.வடிவேலன், ஒன்றியச் செயலா ளர்கள் கே.அபிமன்னன் (தஞ்சா வூர்), சி.பாஸ்கர் (பூதலூர் தெற்கு),  ஏ.நம்பிராஜன் (அம்மாபேட்டை), பூதலூர் தெற்கு ஒன்றியச் செயலா ளர் கே.தமிழரசன், பூதலூர் வடக்கு ஒன்றியத் தலைவர் உதய குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திருவையாறு மின்வாரிய செயற் பொறியாளர் அலுவலகத்தில் நடந்த போராட்டத்திற்கு ஒன்றியக் குழு உறுப்பினர் எம்.ராம் தலைமை  வகித்தார். ஒன்றியச் செயலாளர் ஏ.ராஜா, விவசாயிகள் சங்க மாவட் டப் பொருளாளர் எம்.பழனி அய்யா  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சேதுபாவாசத்திரம் ஒன்றியம் குருவிக்கரம்பை மின்வாரிய அலு வலகத்தில் மனு அளிக்கும் போராட் டம் நடைபெற்றது. தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாவட்டச் செயலாளர்  என்.வி. கண்ணன், விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் வி.ஆர். கே.செந்தில்குமார், ஒன்றியத் தலை வர் வீ.கருப்பையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

திருவாரூர்

திருவாரூர் செயற்பொறியாளர் கோட்ட அலுவலகம் முன்பு நடை பெற்ற போராட்டத்திற்கு விவசாயி கள் சங்க மாவட்டச் செயலாளர் எம். சேகர் தலைமை வகித்து கண்டன உரையாற்றினார். ஒன்றிய செய லாளர் ஜி.பவுன்ராஜ், தலைவர் பி. ஆர்.எஸ்.சுந்தரய்யா, நகரச் செய லாளர் என்.ராஜசேகர், தலைவர் எஸ். ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடந்த இரண்டு நாட்களாக நடந்த கையெழுத்து இயக்கத்தின் வாயிலாக திருவாரூர், நன்னிலம், குடவாசல், வலங்கைமான் உள்ளிட்ட  பகுதி விவசாயிகளிடம் பெற்ற 500-க்கும் மேற்பட்ட மனுக்கள் திரு வாரூர் மின்கோட்ட அலுவலக செயற்பொறியாளர் செந்தமிழ் செல்வியிடம் கொடுக்கப்பட்டன. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட விவ சாயிகள் பங்கேற்றனர். மன்னார்குடி மின்வாரிய செயற் பொறியாளர் கோட்ட அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டமும், மனு கொடுக்கும் போராட்டமும் நடை பெற்றது. போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் எஸ்.தம்புசாமி தலைமை  வகித்தார். மாவட்டக் குழு உறுப்பி னர் கே.கோவிந்தராஜ், ஒன்றியச் செயலாளர் எஸ்.முத்துச்செல்வன் ஆகியோர்  உரையாற்றினர். மாவட் டப் பொருளாளர் வி.எஸ்.கலிய பெருமாள் சிறப்புரையாற்றினார். பின்பு, மின்வாரிய மன்னார்குடி கோட்ட செயற்பொறியாளர் பு. மணிமாறனிடம் மனு அளிக்கப் பட்டது. 

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு நடந்த மனு கொடுக்கும் போராட்டத்திற்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி.சிம்சன் தலைமை வகித்தார். மாவட்டச்  செயலாளர் எஸ்.துரைராஜ் கோரிக் கைகளை விளக்கி பேசினார். சங்கத்தின் மாவட்ட, ஒன்றிய நிர்வாகி கள், விவசாயிகள், பொதுமக்கள் கண்டன முழக்கமிட்டனர்.  முன்னதாக சீனிவாசபுரம் பேருந்து நிறுத்தம் அருகிலிருந்து பேரணியாக வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கரூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கரூர் - கோவை சாலையில் உள்ள மாவட்ட மின் வாரிய அலுவலகத்தில் மின்வாரிய முதன்மை பொறியாளரிடம் மாவட் டச் செயலாளர் மா.ஜோதிபாசு கோரிக்கை மனுவை வழங்கி னார். மனு கொடுக்கும் போராட்டத் திற்கு கட்சியின் கரூர் மாநகர செயலாளர் எம்.தண்டபாணி தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் வெள்ளியணை கடைவீதி யில் மனு கொடுக்கும் இயக்க தெரு முனை விளக்க கூட்டம் நடை பெற்றது. கூட்டத்திற்கு விவசாயி கள் சங்க மாவட்ட துணைச் செய லாளர் எஸ்.பி. ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் கே.கந்தசாமி, சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.முரு கேசன், கட்டுமான சங்க மாவட்டச் செயலாளர் சி.ஆர்.ராஜாமுகமது கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். பின்னர், வெள்ளியணை உதவி மின் பொறியாளர் அலுவல கத்தில் கோரிக்கை மனுக்களை வழங்கினர். குளித்தலை காந்தி சிலை முன்பு நடைபெற்ற தெருமுனை கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத்  துணைத் தலைவர் பி.சங்கரநாராய ணன் தலைமை வகித்தார். விவசாயி கள் சங்க மாவட்டச் செயலாளர் கே.சக்திவேல், விதொச மாவட்டச் செயலாளர் பி.ராஜூ, மாவட்ட பொருளாளர் கே.சுப்ரமணியன், சிபிஎம் குளித்தலை ஒன்றியச் செய லாளர் இரா.முத்துசெல்வன்,  கிருஷ் ணராயபுரம் ஒன்றியச் செயலாளர் ஜி.தர்மலிங்கம், கடவூர் வட்டச் செயலாளர் பி.பழனிவேல், தோகை மலை ஒன்றியச் செயலாளர் ஏ.சுப்பிர மணியன் ஆகியோர் பேசினர். குளித்தலை காந்தி சிலை முன்பிருந்து ஊர்வலமாக சென்று,  குளித்தலை மின்வாரிய செயற் பொறியாளர் அலுவலகத்தில் கோ ரிக்கை மனுக்களை வழங்கினர்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டம் மின்வாரிய அலுவலகம்  முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு ஒன்றியச் செயலாளர் தியாக ராஜன் தலைமை வகித்தார். விவ சாயிகள் சங்க மாவட்டச் செயலா ளர் மணிவேல் சிறப்புரையாற்றினர். ஜெயங்கொண்டம் ஒன்றியச் செய லாளர் வெங்கடாசலம், ஆண்டி மடம் வட்டச் செயலாளர் பரமசிவம், தா.பழூர் ஒன்றியச் செயலாளர்  ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இப்போராட்டத்தில் விவசாயி கள் சங்கம், விவசாயத் தொழிலா ளர்கள் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மாநில,  மாவட்ட, ஒன்றியக் குழு உறுப்பி னர்கள் பலர் கலந்து கொண்டனர்.