districts

img

திமுக மூத்த முன்னோடி மிசா.பி. மதிவாணன் நினைவு தினம்

மயிலாடுதுறை, மே 4 - திமுக முன்னாள் ஒன்றிய கழக செயலா ளர் மிசா.பி. மதிவாணனின் முதலாம் ஆண்டு  நினைவு அஞ்சலி மற்றும் மாற்றுத்திறனா ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும்  விழா மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோவிலில் நடைபெற்றது. இவ்விழா மதிவாணனின் மகன் செம்ப னார்கோவில் வடக்கு ஒன்றியச் செயலாளர் அன்பழகன் மற்றும் தஞ்சை மண்டல தகவல் அணி பொறுப்பாளர் ஸ்ரீதர் தலைமை யில் நடைபெற்றது.  மி.சா மதிவாணன் உருவப்படத்திற்கு திமுக மாவட்டச் செயலாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா முரு கன் தலைமையில், கட்சி நிர்வாகிகள் மாலை  அணிவித்து மரியாதை செய்தனர். தொ டர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினர். இந்நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் பி.சீனிவா சன் மற்றும் திமுக ஒன்றிய, நகர பேரூர் நிர்வாகிகள் புகழஞ்சலி செலுத்தினர்.

;