தஞ்சாவூர், ஏப்.10 - இந்தியா கூட்டணி சார்பில் தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டி யிடும் திமுக வேட்பாளர் ச.முரசொலி புதன் கிழமை, பேராவூரணி நகர் பகுதி, அண்ணா சிலை, பேராவூரணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நம்பிவயல், நடுவிக் கோட்டை, கொண்டிக்குளம், கழுகப்புலிக் காடு, பில்லங்குழி, பண்ணவயல், சுந்தர் ராஜபுரம், கூத்தாடி வயல், கார்காவாயல், கோட்டாக்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்க ளில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடு பட்டார். அப்போது அவர் பேசுகையில், “சாதா ரண ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்த என்னை நாடாளுமன்ற வேட்பாளராக நிறுத்திய தலைவர் தளபதி. நானும் உங்களைப் போன்ற சாதாரண குடும்பத் தைச் சேர்ந்தவன். உங்கள் சிரமங்களை நன்கு உணர்ந்தவன். தமிழ்நாடு அரசு மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங் களை செயல்படுத்தி வருகிறது. உங்கள் பகுதிகளுக்கு தேவையான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை கொண்டு வருவேன். வாக்களித்த மக்களுக்கு என்றும் விசுவாசமாக இருப்பேன். எனவே நீங்கள் அனைவரும் உதயசூரியன் சின்னத் தில் வாக்களித்து, என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்றார். பிரச்சாரப் பயணத்தில், பட்டுக் கோட்டை எம்எல்ஏ கா.அண்ணாதுரை, பேராவூரணி எம்எல்ஏ நா.அசோக்குமார், திமுக பேராவூரணி தொகுதி பார்வையா ளர் நாகை மனோகரன், பட்டுக்கோட்டை தொகுதி பார்வையாளர் புதுக்கோட்டை சரவணன், பொதுக்குழு உறுப்பினர் அ. அப்துல் மஜீத் மற்றும் கூட்டணிக் கட்சி களின் தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். திருவையாறு திமுக வேட்பாளர் ச.முரசொலி, திரு வையாறு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பூதலூர் ஒன்றியம் செங்கிப்பட்டி, ராய முண்டான்பட்டி, மனையேரிப்பட்டி, புதுப் பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் செய்தார். திருவையாறு எம்.எல்.ஏ. துரை.சந்திர சேகரன், திமுக ஒன்றியச் செயலாளர் முரு கானந்தம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருவையாறு தொகுதி தேர்தல் ஒருங்கி ணைப்பாளர் என்.வி. கண்ணன், கே.பக்கிரி சாமி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.தமிழ்ச்செல்வி, வழக்கறிஞர் வெ. ஜீவகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர்.