பெரம்பலூர், மார்ச் 31 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரம் பலூர் மாவட்ட சிறப்பு பேரவை கூட்டம் துறை மங்கலத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.செல்ல துரை தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் எம்.கருணாநிதி வரவேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள், ஒன்றியச் செயலாளர்கள் ஆலத்தூர் செல்லதுரை, குன்னம் செல்லமுத்து, வேப்பந் தட்டை சக்திவேல், மின்னரங்க செயலாளர் எம்.பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலக் குழு உறுப்பினர் சாமி.நடராஜன் சிறப்புரையாற்றினார். மாவட்டக் குழு முடிவுகள் குறித்து கட்சி யின் மாவட்டச் செயலாளர் பி.ரமேஷ் விளக்க உரையாற்றினார். பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கே.என்.அருண்நேரு, சிதம் பரம் நாடாளுமன்றத் தொகுதி விசிக வேட்பாளர் தொல்.திருமாவளவன் ஆகியோ ரது வெற்றிக்கு மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் தீவிர களப்பணி ஆற்றுவது என முடிவு செய்யப்பட்டது. பின்னர் மாநிலக் குழு உறுப்பினர் சாமி.நட ராஜனிடம் தேர்தல் நிதி அளிக்கப்பட்டது. இதில் கட்சி உறுப்பினர்கள், வெகுஜன அமைப்பினர் கலந்து கொண்டனர். நகரச் செயலாளர் (பொ) பி.கிருஷ்ணசாமி நன்றி கூறினார்.