பெரம்பலூர்/தஞ்சாவூர், அக்.3 - அக்.2 அண்ணல் காந்தியடி களின் பிறந்த நாளை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள காந்தி உருவச்சிலைக்கு மாவட்ட ஆட்சியர் க.கற்பகம், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத் தினர். பின்பு, தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியம் சார்பில், காதி கிராப்ட் அங்காடியில் தீபாவளி கதர் சிறப்பு தள்ளுபடி விற்பனையை ஆட்சியர் துவக்கி வைத்தார். நெசவாளர் குடும்பங்களின் வாழ்வா தாரம் மேம்பட, அவர்களின் அயர்விலா உழைப்பிற்கு உரிய அங்கீகாரம் வழங்கிட பொதுமக்கள் அனைவரும் கதர் ஆடை களை வாங்கி உடுத்த வேண்டும். பெரம்ப லூர் மாவட்டத்திற்கு கடந்த ஆண்டு தீபா வளி விற்பனை இலக்காக ரூ.50 லட்சம் நிர்ண யிக்கப்பட்ட நிலையில், இந்தாண்டு ரூ.95 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என ஆட்சி யர் கூறினார். தஞ்சாவூர் தஞ்சாவூர் காதி கிராப்ட் நிறுவனத்தில், தீபாவளி கதர் சிறப்பு விற்பனை துவக்க விழா மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலை மையில் நடைபெற்றது. நடப்பாண்டு தஞ்சா வூர் மாவட்டத்திற்கு ரூ.90 லட்சம் விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என ஆட்சியர் தெரிவித்தார்.