districts

img

துப்புரவுப் பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கல்

தஞ்சாவூர், நவ.8-  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பேரூராட்சி அலுவல கத்தில், பேராவூரணி கோக்கனட் சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் சங்கம் சார்பில், தூய்மைப் பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு தலைவர் எஸ்.ஏ.தெட்சிணாமூர்த்தி தலைமை வகித்தார். செயலாளர் நடராஜன் வரவேற்றார். வர்த்தகர் கழகத் தலைவர் ஆர்.பி.ராஜேந்திரன், திமுக நகரச் செயலாளர் என்.எஸ். சேகர், லயன்ஸ் முதல் துணை ஆளுநர் பொறியாளர் ஏ.சவரி ராஜன் பேரூராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு சேலை, கைலி,  துண்டு உள்ளிட்ட புத்தாடைகள், இனிப்புகளை வழங்கி, அவர்க ளின் சேவையை பாராட்டிப் பேசினார். இதேபோல் குருவிக் கரம்பை, வெள்ளாளங்காடு, வீரியங்கோட்டை உள்ளிட்ட ஊராட்சி களில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கும் தீபாவளி  பரிசு வழங்கப்பட்டது.