திருவாரூர், அக்.31 - வலங்கைமானில் இருந்து குட வாசல் செல்லும் பகுதியில் தீபா வளி விற்பனைக்காக இருப்பு வைத் திருந்த பட்டாசு வெடிகள் தீப்பற்றி பெரும் விபத்து ஏற்பட்டது. திருவாரூர் மாவட்டம் வலங் கைமான் அருகே வலங்கைமான்-குடவாசல் சாலை கீழத்தெருவில் செந்தில்குமார் என்பவருக்கு சொந்தமான பட்டாசுக் கடை உள்ளது. இதன் பின்புறம் தீபாவளி பண்டிகை விற்ப னைக்காக இருப்பு வைக்கப்பட்டிருந்த வெடி கள் திடீரென தீப்பிடித்து எரிந்தன. இதனையடுத்து வலங்கைமான் மற்றும் குடவாசல் தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத் தனர். இதில் உயிர் சேதம் எதுவுமில்லை. வெடி இருப்பு வைத்திருந்த இடத்தில், தீ விபத்து ஏற்பட்டதையடுத்து அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்திற்குள்ளாகினர். வலங்கைமான் பகுதியில் 12 வெடி உற்பத்தி கடைகள் மற்றும் 48 விற்பனை கடைகள் உள்ளன. தீபாவளி பண்டிகைக் காக, ஆபத்து ஏற்படுத்தும் வெடி மற்றும் வெடி மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டிருப் பது குறித்து மாவட்ட கண்காணிப்பாளர் ஜெய குமார் தலைமையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வலங்கைமான் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், அனு மதியின்றி இருப்பு வைக்கப்பட்ட வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப் பிடத்தக்கது.