மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் வட்டாரத்திற்குட்பட்ட கழனிவாசல் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நெற்களம் கட்டப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி செவ்வாயன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உமாசங்கர், கஜேந்திரன் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரிகள் உடனிருந்தனர்.