புதுக்கோட்டை, அக்.26- பள்ளிக்கல்வித்துறையின் சார்பில், புதுக்கோட்டை மாவட்ட அளவிலான கலைத் திருவிழாவினை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி வியாழக்கிழமை தொடங்கி வைத்தார். இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமை வகித்தார். கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை முன்னிலை வகித்தார். விழாவில் அமைச்சர் பேசுகையில், 2022-23-ஆம் கல்வியாண்டில் மாநில அள விலான கலைத்திருவிழா போட்டிகளில் 61 மாணவ, மாணவிகள் வெற்றி பெற்று மாநில அளவில் 3-ஆம் இடத்தை பிடித்தனர். ஒரு கலையரசி பட்டத்தை விராலிமலை செரளப்பட்டி பள்ளி மாணவி ராஜஹரிணி பெற்றார். மேலும் நிகழாண்டில் பள்ளி அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு வட்டார அளவில் 26,767 மாணவர்கள் பங்குபெற்று மாவட்ட அளவில் 6,721 மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். எனவே மாணவ, மாணவிகள் அனைவரும் கல்வியுடன் சேர்ந்து கலை களிலும் தங்களது திறமைகளை காண் பித்து, மாநில அளவிலான கலைத்திரு விழாவில் பங்கேற்று வெற்றி பெற்று, புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றார். மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் த.ஜெயலட்சுமி, புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், நகர்மன்றத் துணைத் தலைவர் எம்.லியாகத் அலி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (பொ) மு.சிவகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.