districts

img

கிளினிக் திறப்பு விழாவில் தீக்கதிருக்கு சந்தா வழங்கல்

நாகப்பட்டினம், அக்.27 - நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் சட்டமன்றத்திற்குட்பட்ட திருப்பூண்டி ஊராட்சியில் ‘நிவேஷ் கிளினிக்’ என்ற பெயரில் மருத்துவமனை திறக்கப்பட்டது. இதனை கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலி திறந்து வைத்தார். கிளினிக் உரி மையாளர் கார்த்திகேயன் தீக்கதிர் ஓராண்டு  சந்தா தொகையினை கீழையூர் கிழக்கு ஒன்றியச் செயலாளர் எம்.அப்துல் அஜீஸ்-யிடம் வழங்கினார். இதில் முன்னாள் ஒன்றிய பெருந்தலை வர் மு.ப.ஞானசேகரன், மனிதநேய மக்கள்  கட்சி நாகை மாவட்டத் தலைவர் ஓ.எஸ்.இப்ராகிம், வாலிபர் சங்க ஒன்றியச் செயலா ளர் என்.பி.எஸ்.கண்மணி  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.