தூத்துக்குடி,ஜன.2- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் சார்பில் ஆத்தூர் அரசு மேல் நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு நோட்டு மற்றும் ஆடைகள் வழங்கப் பட்டன. தூத்துக்குடி மாவட்டத் தில் கடந்த டிசம்பர் மாதத்தில் பெய்த வரலாறு காணாத அதி கனமழையால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. பெரும் பான்மையான அரசு பள்ளிகளில் மழைநீர் புகுந்தன. மழை வெள்ளத் தில் பாதிப்படைந்த ஆத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கடந்த மாதம் சுத்தம் செய்தனர். அப்போது பள்ளி மாணவ மாணவியர் களுக்கு நோட்டு புத்தகம், ஆடைகள் வழங்கப்படும் என சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் சம்பத் உறுதி அளித்தார். அதனைத் தொ டர்ந்து ஜனவரி 2 செவ்வா யன்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் ஆடைகளும், அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் சார்பில் நோட்டுகளும் ஆத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் 180 மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்விற்கு இன்சூ ரன்ஸ் ஊழியர் சங்கத்தின் தென் மண்டல துணைத் தலைவர் முத்துக்குமாரசாமி தலைமை வகித்தார். மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் கே.பி.ஆறு முகம் மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் மற்றும் ஆடைகளை வழங்கி துவக்கி வைத்தார். இந்நி கழ்வில் சிபிஎம் ஆழ்வார் திருநகரி ஒன்றிய செய லாளர் ரவிச்சந்திரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர் சீனி வாசன், அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் சார்பில் திருநெல்வேலி கோட்ட பொதுச் செயலாளர் பொன்னையா மற்றும் நிர்வாகிகள் சீனிவாசன், மதுபால், பட்டன், விநா யகம், ராமசாமி, இசக்கி முத்து டென்னிசன், லெனின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.