மயிலாடுதுறை, செப்.14- அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தை இழிவுபடுத்தி அவதூறாக முகநூலில் பதிவிட்ட மயி லாடுதுறையைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி பிரமுகரின் வீட்டை மாதர் சங்கத்தினர் துடைப்பத்துடன் சென்று முற்றுகையிட்டனர். மாதர் சங்க மாநில நிர் வாகிகள் சென்னை காவல் ஆணையரைச் சந்தித்து திரைப்படக் கலைஞர் விஜய லெட்சுமி நாம் தமிழர் கட்சி யின் மாநில ஒருங்கிணைப் பாளர் சீமான் மீது கொடுக் கப்பட்டுள்ள புகார் மீது விசா ரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனப் புகார் மனு கொடுத்துள்ளனர். இதையடுத்து மாதர் சங்கத்தை விமர்சித்தும் இழிவுபடுத்தும் வகையிலும் மயிலாடுதுறை கூறைநாடு, கஸ்தூரிபாய் நகரில் வசிக் கும் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த செந்தில் முகநூலில் பதிவிட்டுள்ளார். செந்திலின் நடவடிக் கைக்குக் கண்டனம் தெரி வித்து சங்கத்தின் மயிலாடு துறை மாவட்டத் தலைவர் சரிதா, மாவட்டச் செயலாளர் ஜி.வெண்ணிலா, ஜி.கலைச் செல்வி, குணசுந்தரி, கண் ணகி, டி.ஆர்.ராணி, சண்முக வள்ளி, செல்வபாக்கியவதி உள்ளிட்ட மாதர் சங்கத்தி னர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செய லாளர் பி.சீனிவாசன், மாவட் டச் செயற்குழு உறுப்பினர் கள் எஸ்.துரைராஜ், மாரியப் பன், டி.சிம்சன், ஏ.ரவிச்சந்தி ரன், சி.விஜயகாந்த், கே.பி.மார்க்ஸ், மயிலாடுதுறை ஒன்றியச் செயலாளர் டி.ஜி.ரவி, நகர் செயலாளர் ஏ.ஆர். விஜய், வாலிபர் சங்க மாவட் டச் செயலாளர் ஏ.அறிவழ கன், மாவட்டத் தலைவர் அய்யப்பன் உட்பட ஏராள மானோர் குப்பைகளை கூட்டித்தள்ளும் துடைப்பம், அறுந்த செருப்புகளை எடுத்துக்கொண்டு அவதூ றாகப் பதிவிட்ட செந்தில் வீட் டின் முன்பு போராட்டம் நடத் தினர். மாதர் சங்கத்தினர் தமது வீட்டின் முன்பு போரா ட்டத்தில் ஈடுபட்டுள்ளதை அறிந்த செந்தில் வீட்டிற் குள்ளேயே பதுங்கியிருந் தார். தகவலறிந்து வந்த மயி லாடுதுறை காவல் ஆய்வா ளர் செல்வம் உள்ளிட்ட காவ லர்கள் செந்திலை கைது செய்வதாக உறுதியளித்த தையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. மாதர் சங்கம் அளித்த புகாரைத்தொடர்ந்து செந் திலை காவல்துறையினர் கைது செய்தனர்.