இராமநாதபுரம், ஜூலை 23-
பழங்குடி மக்கள் பகுதி யில் பாகுபாடு காட்டாமல் சத் திரக்குடி வெற்றி நகரில் அடிப்படை வசதிகளை தமி ழக அரசும் மாவட்ட நிர்வாக மும் செய்து கொடுக்க வேண் டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள் ளது.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பர மக்குடி தாலுகா செயலாளர் டி.ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:
பரமக்குடி தாலுகா போக லூர் ஒன்றியம் தீயனூர் ஊராட்சிக்கு உட்பட்ட சமத்து வபுரம் வெற்றிநகரில் காணிக் கர் எனும் பழங்குடியின சமூ கத்தை சார்ந்த கைரேகை ஜோசி யம் பார்க்கும் 75 குடும்பத்தி னர் வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கு அரசால் 2006 இல் இலவச வீட்டுமனை ஒதுக்கப்பட்ட போது அப்பகு தியில் சாலைவசதி செய்து கொடுத்துள்ளனர். சுமார் 17ஆண்டு காலமாக இது வரை அந்த சாலைகள் செப்ப னிடப்படாமல் தெருக்கள் முழுவதும் தார்ச்சாலைகள் மணற்சாலைகளாகி மாறி குண்டும் குழியுமாக உள் ளது. மழை பெய்யும்போது சேரும் சகதியுமாய் நடக்கக் கூட முடியாத சூழலில் அம் மக்கள் வாழ்ந்து வருகின்ற னர். குடிநீர் குழாய் பதிக்கப் பட்டுள்ளது. ஆனால் தண் ணீர் வருவதில்லை. தெரு விளக்குகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக உள்ளது. சுமார் 25 குடும்பங்களுக்கு வீட்டுமனை மட்டுமே உள் ளது. வீடு இல்லை. வீடுகட்ட வசதியின்றி டெண்ட் அமைத்து வசிக்கின்றனர். பிரதம மந்திரி வீடுகட்டும் திட்டம், பசுமை வீடுகள், கலைஞர் வீட்டுவசதி திட்டம் என அரசாங்கத்தால் பல திட்டங்கள் இருந்தும் இவர் களுக்கு செய்து கொடுக் கப்படவில்லை.
அதேபோல் ஒரு வீட்டில் கூட கழிப்பறை கிடையாது. திறந்தவெளி காட்டுப் பகுதி யையே பயன்படுத்தும் அவ லம் உள்ளது. சுபகாரியங்கள் நடத்திட பொதுவான சமு தாயக்கூடம் இல்லை. எந்த வித அடிப்படை வசதிகள் ஏதுமின்றி வாழும் பழங்குடி மக்களின் துயர் துடைத்திட, விளிம்புநிலை மக்களுக் காக ஆட்சி நடத்துகிற தமி ழக அரசும் இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகமும், ஆதி திராவிட மற்றும் பழங்குடி யின நலத்துறையும் விரைந்து நடவடிக்கை எடுத்து அடிப் படை வசதிகளை செய்து தர வேண்டும். இல்லையெனில் அப்பகுதி மக்களை திரட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் இம்மாத இறுதியில் போகலூர் யூனி யன் அலுவலகத்தில் கோரிக் கைகளை நிறைவேற்றும் வரை தொடர் காத்திருப்பு மற்றும் குடியேறும் போராட் டம் நடத்தப்படும்.
இவ்வாறு அதில் தெரி வித்துள்ளார்.