districts

img

மாணவர்களுக்கு ரூ.6.35 கோடி கல்விக் கடன் ஆணை வழங்கல்

தஞ்சாவூர், பிப்.15-  தஞ்சாவூர் அறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கில், மாபெரும் கல்விக் கடன் முகாம் மாவட்ட ஆட்சி யர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடை பெற்றது. மாவட்ட நிர்வாகம் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட முன்னோடி வங்கி  இணைந்து நடத்திய மாபெரும் கல்விக்  கடன் முகாமில் 10 வங்கிகள் கலந்து கொண்டன.  முகாமில் 134 மாணவ-மாணவி களுக்கு ரூ.6.35 கோடி மதிப்பிலான கல்விக் கடன் ஆணை வழங்கப்பட்டது.  மேலும், 150-க்கும் மேற்பட்ட பயனாளி கள் தங்களது விண்ணப்பங்களை கல்விக் கடன் வேண்டி இம்முகாமில் சமர்ப்பித்துள்ளனர். முன்னதாக, இ-சேவை மையத்தின் மூலம் பயனாளி கள் இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டிய சான்றி தழ்களை பதிவேற்றம் செய்ய தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.  தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பி னர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், மாநிலங் களவை உறுப்பினர் எஸ்.கல்யாண சுந்தரம், மாவட்ட வருவாய் அலுவலர் தெ.தியாகராஜன், தஞ்சாவூர் மாநக ராட்சி மேயர் சண்.இராமநாதன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, மாநகராட்சி துணை மேயர் மரு.அஞ்சுகம் பூபதி, தஞ்சாவூர் முன்னோடி வங்கி மேலாளர்  பிரதீப் கண்ணன் மற்றும் பலர் கலந்து  கொண்டனர்.