districts

img

உதவித்தொகையை உடனே வழங்குக!

மயிலாடுதுறை, ஜன.29 - மாற்றுத்திறனாளிகளுக்கு விரை வில் உதவித்தொகை வழங்க வேண்டு மென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம், செம்ப னார்கோவில் ஒன்றியம் ஆக்கூரில் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க ஒன்றிய பேரவைக் கூட்டம் டி.விஜயரங்கன் தலைமையில் நடைபெற்றது. பேரவையில் மாவட்டக்குழு உறுப்பினர் ராசாபிள்ளை வரவேற் றார். மாவட்டச் செயலாளர் எம்.புரு ஷோத்தமன் துவக்கி வைத்து உரை யாற்றினார். வேலையறிக்கையை ஒன்றிய அமைப்பாளர் கண்ணன் வாசித்தார். மாவட்டத் தலைவர் டி.கணேசன், மாவட்ட துணைத்தலைவர் டி.கோ விந்தசாமி, விவசாயிகள் சங்க ஒன்றி யச் செயலாளர் பி.தட்சிணாமூர்த்தி, உதவிப் பேராசிரியர் கே.செந்தில் குமார், மாவட்டப் பொருளாளர் ஜி. லெட்சுமி, மாதர் சங்க ஒன்றியச் செய லாளர் டி.கண்ணகி, வாலிபர் சங்க  ஒன்றியச் செயலாளர் சபீர் அகமது ஆகி யோர் உரையாற்றினர். பேரவையை வாழ்த்தி சங்கத்தின் மாநிலச் செய லாளர் பி.ஜீவா சிறப்புரையாற்றினார். சீர்காழி சீர்காழி ஒன்றியம் வைத்தீஸ்வரன் கோவிலில் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைகளுக்கான சங்க  ஒன்றிய பேரவைக் கூட்டம் ஒன்றியத்  தலைவர் ஆர்.நாகராஜன் தலைமை யில் நடைபெற்றது. கிளைச் செயலாளர் வி.பி.முருகன்  வரவேற்றார். மாவட்டத் தலைவர் டி. கணேசன் துவக்கி வைத்து உரையாற்றி னார். வேலையறிக்கையை மாவட்டச் செயலாளர் புருஷோத்தமன்  வாசித் தார். தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் மாவட்டச் செயலாளர் இளங்கோ வன், வழக்கறிஞர் ஞானபிரகாசம், விவ சாயிகள் சங்க மாவட்டப் பொருளா ளர் செல்லப்பன், வாலிபர் சங்க ஒன்றி யச் செயலாளர் குமார் உள்ளிட் டோர் வாழ்த்திப் பேசினர். மாநிலச்  செயலாளர் பி.ஜீவா சிறப்புரையாற்றி னார். இக்கூட்டங்களில், உதவித்தொகை பெறும் மாற்றுத்திறனாளிக்கு நிறுத்தப் பட்ட மீனவர் நிவாரணத் தொகையை உடனே வழங்க வேண்டும். நிபந்தனை யற்ற வங்கி கடன் வழங்கி, மாற்றுத் திறனாளிகளை அலைக்கழிப்பதை கைவிட வேண்டும். உதவித்தொகை பெற ஜூன் மாதம் முதல் பதிவு செய்து காத்திருக்கும் மாற்றுத்திறனாளிக்கு உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.