மன்னார்குடி, நவ.8- திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தேசிய மேல்நிலைப் பள்ளியில் என்சிசி மாணவர்களுக்கு தீ தடுப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை பயிற்சி நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியர் (பொ) எஸ்.கமலப்பன் தலைமை வகித்தார். என்சிசி கடற்படை அதிகாரி முனைவர் எஸ்.அன்பரசு, என்சிசி ஆர்மி அதிகாரி எஸ்.திவாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மன்னார்குடி தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலைய அலுவலர் த.சீனிவாசன், நிலைய அலுவலர் (போக்குவரத்து) ந.கேசவன், சிறப்பு நிலைய அலுவலர் சு.பரமசிவம் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மாணவர்களுக்கு தீ தடுப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை குறித்த பயிற்சிகளை வழங்கினர். என்சிசி, என்எஸ்எஸ் மாணவர்கள் 300 பேர் பங்கேற்று பயனடைந்தனர்.