திருவாரூர், ஜூலை 10-
நலத்திட்ட உதவிகள் பெறுவதற்காக திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் மாவட்ட தலைநகருக்கு வரும் அலைச்சலை தவிர்க்கும் பொருட்டு, முதற்கட்டமாக கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம், உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டம், வங்கி கடன் மானி யம் வழங்கும் திட்டம், திருமண உதவித் தொகை வழங்கும் திட்டம். மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டம் என 5 திட்டங்களுக்கும் ஆகஸ்ட் 1 அன்று முதல் இ-சேவை மையம் மூலமாக விண்ணப்பிக்கும் முறை செயல்படுத்தப்பட உள்ளது,
எனவே மேற்கண்ட ஐந்து திட்டங்களில் விண்ணப் பிக்க விரும்பும் மாற்றுத்திறனாளிகள் அதற்கான சான்று களுடன் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாகவோ அல்லது https://www.tnesevai.tn.gov.in/Citizen/Registration.aspx என்ற இணையதளம் வழியாக நேரடியாக விண்ணப்பித்து பயன்பெறுமாறு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.