சென்னை,ஆக.4-
புரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 63 வயது நபருக்கு சென்னை ஏசியன்இன்ஸ்டிடியூட் ஆப் நெப்ராலஜி அன்ட் யூரோலஜி மருத்துவமனையில் ரோபோடிக் உதவியுடன் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு ஒரே வாரத்தில் பூரண குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
வெற்றிகரமான இந்த அறுவை சிகிச்சை முறை சிறு நீரகவியல் மற்றும் புற்றுநோயியல் துறைகளில் ஒரு முன் னேற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழ்நாட்டில் உள்ள விழுப்புர மாவட்டத்தை சேர்ந்த 63 வயதான நபருக்கு சிறுநீர் ஓட்டம் அதிகரித்து இருந்தது. புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பதை அளவிடும் மற்றும் உறுதிப்படுத்தும் இரத்தப் பரிசோதனையில் இவ ருக்கு புரோஸ்டேட் நோய் இருப்பது கண்டறியப்பட்டது. அதன் பின் அந்த முதியவர் ஏஐஎன்யூ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவுடன், நோயறிதலை உறுதிப்படுத்த ஒரு பயாப்ஸி செய்யப்பட்டு, மருத்துவமனை யின் நிபுணர் குழுவால் ரோபோடிக்- உதவியுடன் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அந்த கட்டி அகற்றப்பட்டது. அறுவைசிகிச்சைக்குப் பிறகு ஒரு வாரத்திற்குள், எந்த பிரச்சனையும், புற்றுநோய் அறிகுறிகளும் இல்லாமல் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதனை ஏஐஎன்யூ மருத்துவ மனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் அருண் குமார் தெரிவித்துள்ளார்.