districts

img

தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியின் 75-ஆம் ஆண்டு பவளவிழா நிறைவு

மயிலாடுதுறை, ஆக.24-

       தருமபுரம் ஆதீனம் கலைக்  கல்லூரியின் 75-ஆம் ஆண்டு பவள விழா நிறைவை முன்னிட்டு நடை பெற்ற முப்பெரும் விழாவில் தமிழ்  நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் கல்லூரி பவளவிழா மலரையும், திருக்குறள் உரைவளம் நூலையும் வெளியிட்டார். தொடர்ந்து தருமை இணையதள வானொலி மற்றும் தொலைக்காட்சி ஒலி ஒளிப்பதிவகத்தையும் திறந்து வைத்தார்.  

     மயிலாடுதுறை மாவட்டம், தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரி யின் 75-ஆம் ஆண்டு பவள விழா நிறைவை முன்னிட்டு  முப்பெரும் விழா நடைபெற்றது. நிகழ்விற்கு தருமபுரம் ஆதீனத்தின் 27-ஆவது  குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலை வகித்தார்.

     இவ்விழாவில், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு,  பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர்  சிவ.வீ. மெய்யநாதன், தமிழ்நாடு அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ராமலிங்கம், சட்டமன்ற உறுப்பினர்கள் எம். பன்னீர்செல்வம், நிவேதா எம்.முருகன், எஸ்.ராஜ்குமார், இந்து  சமய அறநிலையத்துறை ஆணை யர் க.வீ.முரளீதரன், மயிலாடு துறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி. மகா பாரதி, தருமபுரம் ஆதீனம் கலைக்  கல்லூரியின் முதல்வர் சி.சாமி நாதன், செயலாளர் இரா.செல்வ நாயகம், இந்து சமய அறநிலை யத் துறை உயர்நிலைக் குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

     தருமபுரம் ஆதீனம் திருக்கயி லாய மரபில் வந்த தொன்மையான  ஆதீனங்களில் ஒன்றாகும். இந்த  ஆதீனத்தின் சார்பாக  1946-ஆம்  ஆண்டு ஆகஸ்ட் 2-ஆம் தேதி   தமிழ்க் கல்லூரி தொடங்கப்பட்டது. 1988-ஆம் ஆண்டு முதல் கலைக்  கல்லூரியாக மாற்றம் பெற்று 13 இள நிலை வகுப்புகளும், எட்டு முது நிலை வகுப்புகளும், எட்டு பட்டய வகுப்புகளும் நடைபெறுகின்றன. தமிழ்த்துறையும், வணிகவியல் துறையும் உயராய்வு மையங்களா கத் திகழ்கின்றன. இக்கல்லூரியில் சுமார் 2800 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.  

       இக்கல்லூரியில் யோகா பயிற்சி, அனைவருக்கும் குறைந்த  கட்டணத்தில் கணினிப் பயிற்சி,  இளங்கலை பயிலும் 100 ஏழை  மாணவிகளுக்கு கட்டணமில்லா மல் தையல் பயிற்சி, இளங்கலை பயிலும் பொருளாதாரத்தில் பின் தங்கிய 50 மாணவர்களுக்கு இல வச தட்டச்சுப் பயிற்சி. மாணவர்கள்  மற்றும் அவர்களது பெற்றோர் களுக்கு கண் சிகிச்சை மற்றும் இரு தய சிகிச்சை முகாம்கள், மாவட்ட  மகளிர் திட்டம் மூலம் வேலை வாய்ப்பு முகாம் போன்ற வசதிகள் அளிக்கப்பட்டு வருகின்றன என் பது குறிப்பிடத்தக்கது.