தேனி, ஜூன் 25 -
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி கணவாயில் உள்ள தர்ம சாஸ்தா கோயில் வழியாக வாகனங்களில் செல்வோர், தட்சணையாக காசுகளை சாலையில் வீசி விட்டு செல்வர்.
இந்த காசுகள் ஒவ்வொரு ஆண்டும் ஏலதாரர்கள் மூலம் சேகரிக்கப்பட்டு வருகிறது.நடப்பு ஆண்டுக்கான ஏலம் ஆண்டிபட்டி மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெற்றது. ஏலத்திற்கு இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கலைவாணன் தலைமை வகித்தார்.
பெரியகுளம் சரக ஆய்வாளர் கார்த்திகேயன், கோயில் செயல்அலுவலர் ஹரிஷ் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஏலத்தில் கலந்து கொண்டவர்களில் உயர்ந்த ஏலத்தொகை கேட்ட பா.உதயபாண்டி என்பவருக்கு ரூ.28 லட்சத்துக்கு ஏலம் உறுதி செய்யப் பட்டது.