districts

img

கம்பகரேஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழா

கும்பகோணம், பிப்.2 - திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்க வந்ததால், அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் நீண்ட நேரம் வெளியில் நிறுத்தப்பட்டனர். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோ ணம் அருகே உள்ள திருபுவனம் கம்பகரேஸ்வரர் (சரபேஸ்வரர்) கோ யில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு, பிப்.2  அன்று குடமுழுக்கு விழா நடை பெற்றது. இக்கோயில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமானது.  இவ்விழாவிற்கு தமிழக ஆளுநர்  ஆர்.என்.ரவி மற்றும் அவரது மனைவி ஆகியோர் தரிசனம் செய்த னர். இதனால் பொதுமக்கள் மற்றும்  கோயில் அருகே உள்ள குடியிருப்பு  வாசிகள் உள்ளே அனுமதிக்கப்பட வில்லை. ஏராளமான போலீசார் வெளி மாவட்டங்களில் இருந்து வரவ ழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் இருந்தனர். இதனால் அதிகாலை 5 மணி முதல் கோயில் குடமுழுக்கு விழாவை  காண வந்த சிவனடியார்கள் மற்றும்  பக்தர்கள் குடும்பத்துடன் கோயி லுக்கு அப்பால் நிறுத்தப்பட்டு, கிட்டத் தட்ட 5 மணிநேரம் காத்திருக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டது. பக்தர்களுக்கு குடிநீர் மற்றும் கழிப் பிடம், பாதுகாப்பு வசதிகள்கூட செய்து தரப்படவில்லை.  இக்கூட்டத்தால், பொதுமக்கள் சிலர் மயக்கமடைந்தனர். மேலும், ‘எதற்காக ஆளுநர் ஒருவருக்காக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலையை  காவல்துறை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு என்ற பெயரில் பக்தர் களை புறந்தள்ளுவது கண்டிக்கத்தக் கது’ என குரல் எழுப்பினர். கோயிலுக்கு காலை 9 மணிக்கு வந்த ஆளுநர், சுமார் 10.20 மணி வரை கோயில் கும்பாபிஷேகம் மற்றும் தரிசனத்தை முடித்துவிட்டு, ஆதீனம் ஏற்பாடு செய்திருந்த விருது  வழங்கும் விழாவிலும் பங்கேற்று, பின்னர் சென்னை திரும்பினார். அது வரை பக்தர்கள் கோயிலுக்குள் அனு மதிக்கப்படாமல் வெளியில் காத்தி ருந்த கொடுமை நீடித்தது.