districts

img

திடீர் கனமழை அறுவடைக்கு தயாரான பயிர்கள் நாசம்

மயிலாடுதுறை, ஜன.3 -  மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த  டிச.29 ஆம் தேதியிலிருந்து பெய்த கன மழையால் ஏற்கனவே பருவமழையில் அழுகி தப்பித்து அறுவடைக்கு தயா ராக இருந்த பல ஆயிரம் ஏக்கரில் சாகு படி செய்யப்பட்டிருந்த சம்பா, தாளடி பயிர்கள் மழை நீரில் மூழ்கி அழுகி வரு கிறது. தரங்கம்பாடி வட்டத்தில் செம்ப னார்கோவில், திருக்கடையூர், ஆக்கூர்,  திருவிடைக்கழி, பரசலூர், கிடாரங் கொண்டான், இளையாளூர், கழனி வாசல், கீழையூர் உள்ளிட்ட சுற்று  வட்டார பகுதிகளில் நடப்பு ஆண்டு 50  ஆயிரம் ஏக்கருக்கும் மேல் சம்பா  தாளடி நெற்பயிர்கள் நடவு செய்துள்ள னர். பயிர்கள் நடவு செய்தபோது  பருவம் தவறி பெய்தமழை, அதன்பின்னர்  பெய்த வடகிழக்கு பருவமழையால் 50  ஆயிரம் ஏக்கருக்கு மேல் சம்பா, தாளடி பயிர்கள் 2 முறை பாதிக்கப்பட்டது. அதன்பிறகு மழையால் பாதித்த பயிர்க ளுக்கு வட்டிக்கு கடன் வாங்கி உரமிட்டு  போனது போக  காப்பாற்றிய மிச்சமி ருந்த பயிர்கள் அறுவடைக்கு தயார் நிலையிலிருந்தது. இந்நிலையில் வெப்பச் சலனம்  காரணமாக கடந்த டிச.29 ஆம் தேதி யிலிருந்து ஜன. 1 வரை    பெய்த கன மழையால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் பெரும்பாலான இடங்க ளில் வயலில் சாய்ந்து தண்ணீரில் மூழ்கி  அழுகி வருகிறது.

இதனிடையே திருக்கடையூர், சீதை சிந்தாமணி, கிள்ளியூர், இரவணியன் கோட்டகம் பகுதிகளில் மழை வெள்ளத் தால் மூழ்கி அழுகிய பயிர்களை தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத்  தலைவர் டி.சிம்சன், சிபிஎம் மயிலாடு துறை மாவட்ட செயலாளர் பி.சீனிவா சன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் காபிரியேல், ஒன்றிய  செயலாளர் பரமசிவம், ஒன்றியக்குழு உறுப்பினர் குணசேகரன், வாலிபர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் ஐயப் பன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து விவசாயிகளுக்கு ஆறு தல் கூறினர்.

                                          3-வது முறையாக இந்த ஆண்டு விவ சாயிகள் பாதிப்பை சந்தித்துள்ளதால் தமிழக அரசு சம்பா, தாளடி பயிர் சேதம் குறித்து முறையாக வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை மூலம் கணக்கெ டுப்பு செய்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டு தொகையை நிவாரணமாக அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத் துள்ளது.

பொன்னமராவதி

பொன்னமராவதி அருகே உள்ள வாழைகுறிச்சி மற்றும் அதை சுற்றியுள்ள  ஊர்களில் உள்ள வயல்களில் தேங்கிய  மழைநீரால் நெற்கதிர்கள் சாய்ந்து  அழுகி வீணாகி உள்ளது. இதனால் விவ சாயிகள் வேதனையடைந்துள்ளனர். தமிழக அரசு உடனடியாக கணக்கெ டுத்து உரிய இழப்பீடுகள் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.