districts

காலமானார்

திருவாரூர்,டிச.12- திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அரசு கலைக் கல்லூரி வரலாறுத் துறையின் மேனாள் துறைத் தலைவரும், மூத்த வரலாற்று பேராசிரியரும்,குடவாசல் அரசு கலைக் கல்லூரி யின் முதல்வருமான  முனைவர் இ.மாரிமுத்து வியாழக்கிழமை திடீர் உடல் நலக்குறைவால் காலமானார்.  முனைவர் இ.மாரிமுத்து பல்வேறு வரலாற்று கருத்தரங்குகளில் கலந்து கொண்டு பழங் கால இந்திய வரலாறு மற்றும் தொல்லியல் குறித்தான ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தவர். அண்மையில் வந்தவாசி வரலாறும் வந்தவாசிப் போரும் என்ற வரலாற்று நூலை எழுதி வரலாற்று ஆய்வுலகத்திற்கு சிறந்த பங்களிப்பை செய்தவர். சமூகத்தில் ஒடுக்கப்பட்ட,  பொருளாதார ரீதி யாக விளிம்பு நிலையில் இருக்கும் ஏராளமான மாணவ,மாணவிகளின் உயர் கல்விக்கு பக்கபல மாக செயல்பட்டவர். குடவாசல் கல்லூரியில் 2022 ஆம் ஆண்டு இணைந்து கல்லூரி ஆண்டு விழாவில் குடவாசல் ஸ்தல வரலாற்றை நூலாக வெளியிட்டு சிறப்பு செய்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.முதல்வரின் சொந்த ஊரான செங்கல்பட்டு மாவட்டம், கல்குளத்தில் வெள்ளிக்கிழமை இறுதி நிகழ்ச்சி நடைபெறுகிறது.