districts

திருச்சி விரைவு செய்திகள்

இன்று விவசாயிகள்  குறைதீர் கூட்டம்

கும்பகோணம்,  மே 23- கும்பகோணத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் மே 24  ஆம் தேதி நடைபெற உள்ளது என கும்பகோ ணம் கோட்டாட்சியர் லதா  தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கும்பகோணம் கோட்டத்திற்கு உட்பட்ட கும்பகோணம், பாபநா சம், திருவிடைமருதூர் உள்ளிட்ட பகுதிகளைச்  சேர்ந்த விவசாயிகளுக் கான குறைதீர்க்கும் நாள்  கூட்டம் செவ்வாய்க்கிழமை (மே 24) கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவல கத்தில் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற வுள்ளது. கூட்டத்தில் கும்பகோணம், பாபநா சம், திருவிடைமருதூர் தாசில்தார்கள் மற்றும் அனைத்துத் துறை அதி காரிகள் கலந்து கொள்ள  ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. எனவே இந்த கூட்டத்தில் விவசாயிகள் நேரில் வந்து, விவசாயம் தொடர்பான தங்களது குறைகளை தெரிவித்து பயனடையலாம் என தெரி விக்கப்பட்டுள்ளது. 

யோகா பயிற்சி

தஞ்சாவூர், மே 23-  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அரசு கலை அறிவியல் கல்லூரி மற்றும் பாரதிதாசன் பல்கலைக் கழக நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில், உலக யோகா தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.  கல்லூரி முதல்வர் முனைவர் நா.தனராஜன் தலைமை வகித்தார். கும்பகோணம் மனவளக்கலை மன்ற பேரா.லட்சுமணன் யோகா குறித்தும், அதன்  பயன்கள் பற்றியும்  விளக்க உரையாற்றினார். யோகா கலை பயிற்றுநர் கள் சிவபுண்ணியம், சிவப்பிரகாசம் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.  நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாண விகள் யோகா பயிற்சியை  செய்து காட்டினர். 

அபராதம் விதிப்பு

பாபநாசம், மே 23 -  பாபநாசம் பேரூ ராட்சிக்கு உட்பட்ட பகுதி யில் அரசால் தடை செய்யப் பட்ட பிளாஸ்டிக் பயன் பாடு அதிகளவில் உள்ள தால், பாபநாசம் பேரூ ராட்சிக்கு உட்பட்ட கடை களில் பாபநாசம் பேரூ ராட்சி செயல் அலுவலர் கார்த்திக்கேயன் உள்ளிட்ட பணியாளர்கள் சோதனை மேற்கொண் டனர். இதில் 7 கடைகளில் அரசால் தடை செய்யப் பட்ட பிளாஸ்டிக் பைகள்  இருப்பதை உறுதிசெய்து பறிமுதல் செய்தனர். பின்னர் அக்கடைகளுக்கு ரூ.7,500 அபராதம் விதித்த னர்.

மரக்கன்றுகள் வழங்கல்

மெலட்டூர், மே 23 - பாபநாசம் விவேகா னந்தா சமூக கல்வி சங்கம் சார்பில் இயற்கை  வேளாண் சாகுபடி திட்டத் தின் கீழ் மெலட்டூர் அருகே சாலியமங்கலத்தில் மரக்கன்றுகள் வழங்கும்  நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு சுசீலா முன்னிலை வகித்தார். விஜயகுமார் பொதுமக்க ளுக்கு மரக்கன்றுகள் வழங்கினார். பின்னர் பூண்டி, களஞ்சேரி, கம்பர்நத்தம் உள்ளிட்ட கிராமங்களில் பொது  மக்களுக்கு மரக்கன்று கள்  வழங்கப்பட்டன.

நியாய விலைக் கடைகளுக்கு  வரும் பொருட்களில் எடை குறைவு நடவடிக்கை கோரி ஜூன் 3-ல் ஆர்ப்பாட்டம்

மன்னார்குடி, மே 23 - திருவாரூர் மாவட்ட கூட்டுறவு ஊழியர் சங்க (சிஐடியு) மாவட்ட குழு கூட்டம் மாவட்ட தலைவர் டி.முருகையன் தலைமை யில் கூத்தாநல்லூரில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், நியாய விலைக் கடை களில் இறக்கிடும் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட  பொருட்கள் எடை குறைவாக உள்ளதை அதி காரிகள் கண்காணித்து நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும். பழுதடைந்த அங்காடி கட்டிடங்களை சீரமைத்து கழிவறை மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும். மிகவும் மோசமாக பழுதடைந்த கட்டிடங்களுக்கு மாற்றாக புதிய அங்காடி கட்டிடங்களை கட்டி தர வேண்டும். நியாயவிலைக் கடைகளில் காலிப் பணி யிடங்கள் அனைத்தையும் நிரப்பிட வேண்டும். திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை பணி நிரந்தரம் செய்யப்படாத ஊழியர்களை பதிவாளர் சுற்றறிக்கையின்படி, துணை விதி திருத்தம் செய்து பணி நிரந்தரப்படுத்த வேண்டும். பதிவாளர் சுற்றறிக்கையின்படி ஊதிய உயர்வு கிடைக்கப் பெறாத ஊழி யர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும்.  தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தகுதியுள்ள ஊழி யர்களுக்கு பதவி உயர்வு வழங்கிட வேண்டும்  என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி ஜூன் 3 ஆம் தேதி காலை திருவாரூ ரில் கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவா ளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்து வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

நூல் விலை உயர்வுக்கு கண்டனம் மே 25-31 வரை மருந்துத்துணி ஏற்றுமதியாளர்கள் வேலைநிறுத்தம்

விருதுநகர், மே 23- நூல் விலை உயர்வை கண்டித்து விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி பகுதியில் வரும் மே.25-31 ஆம் தேதி வரை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக மருத்துவத் துணி ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர்.  இராஜபாளையம் அருகே உள்ளது சத்திரப்பட்டி பகுதி. இங்கு, மருத்துவத் துணி (பேண்டேஜ் )உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த மருத்துவ துணி உற்பத்தியில் 6 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் இப்பகுதியில் மட்டும் செயல்பட்டு வருகின்றன. இங்கு  உற்பத்தி செய்யப்படும் மருத்துவ  துணியானது உலகின் பல பகுதி களுக்கும் ஏற்றுமதி செய்யபட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை 40 நம்பர் நூலின் விலையானது கிலோ ஒன்றுக்கு ரூ. 200க்கு வாங்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது அதன் விலையானது ரூ. 400 ஆக உயர்ந்துள்ளது. நூலை அதிக விலை கொடுத்து மருத்துவத் துணி உற்பத்தி செய்வதால், உற்பத்தியாளர்கள் பெருத்த நஷ்டத்தை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும், நூல் விலை உயர்வுக்கு காரணம் ஏராளமான பஞ்சுகளை விலைக்கு வாங்கி அதைப் பதுக்கிவைத்து, செயற்கையான தட்டுப்  பாட்டை ஏற்படுத்தி அதிகமான விலைக்கு விற்பனை செய்வதால்  தான் நூல் விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனவே, ஒன்றிய அரசானது, பஞ்சுகளை பதுக்கி வைத்திருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு, பதுக்கி வைக்கப்பட்டுள்ள பஞ்சு களை வெளியே கொண்டு வர வேண்டும். அவ்வாறு செய்யும் பட்சத்தில் நூலின் விலையானது குறைய வாய்ப்புள்ளது என ஏற்று மதியாளர்கள் மற்றும் உற்பத்தியா ளர்கள் தெரிவிக்கின்றனர்.  இந்நிலையில், ஒன்றிய பாஜக அரசானது, நூல் விலையை கட்டுப்படுத்திட உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மே 25 முதல் 31 வரை சத்திரப்பட்டி பகுதியில் இயங்கக்கூடிய விசைத்தறி கூடங்கள் மற்றும் ஏற்றுமதி நிறு வனங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக ஏற்றுமதி உற்பத்தியாளர் சங்க தலைவர் ஆறுமுகம், மருத்துவத் துணி உற்பத்தியாளர் சங்க தலைவர் செந்தில் ராஜ் ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர். இந்த வேலை நிறுத்தப் போராட் டத்தால் நாளொன்றுக்கு ஒரு கோடி ரூபாய் வரை உற்பத்தி இழப்பு ஏற் படும் எனவும், 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது.

வாலிபருக்கு சிறை

திருவாரூர், மே 23 - திருவாரூர் மாவட்டம் நன்னிலம் உபயவேதாந்தபுரத்தை சேர்ந்தவர் மணிகண்டன். கடந்த மாதம் மேனாங்குடியில் நடைபெற்ற கோவில் திரு விழாவில் பாதுகாப்புக்காக வந்திருந்த காவலரை பாட்டிலால் தாக்கிய சம்பவத்தில் இவர் மீது வழக்கு பதியப்பட்டது. மேலும் பல்வேறு குற்றச்  செயல்களில் தொடர்புடைய இவரை கைது செய்ய நன்னிலம் துணை கண்கா ணிப்பாளர் இளங்கோவன், பேரளம் காவல் ஆய்வாளர் செந்தில்குமரன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டிருந்தது. இதனைத் தொ டர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.விஜயகுமார் உத்தரவின் பேரில்  சனிக்கிழமை மணிகண்டன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு திருச்சி  மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

தற்காப்புக்கலை பயிற்சி முகாம் 

தஞ்சாவூர், மே 23-  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அமிர்தம் மகாலில் தாய் புடோகான் ஸ்போர்ட்ஸ் மற்றும் கராத்தே பயிற்சி பள்ளி சார்பில், ஒரு நாள் தற்காப்புக் கலை பயிற்சி முகாம் நடைபெற்றது.  பயிற்சிப் பள்ளி நிறுவனரும், தலைமைப்  பயிற்சியாளருமான ரென்சி கே.பாண்டியன், கராத்தே, சிலம்பம் மற்றும் புதிய  தற்காப்புக் கலையான ஜூ-ஜூட்சூ குறித்தும், பயிற்சிப்பள்ளி மாணவர்க ளுக்கு பயிற்சி அளித்தார். பயிற்சிப் பள்ளி பெற்றோர் சங்கத் தலைவர் முரு கையன், செயலாளர் முருகானந்தம், பொருளாளர் ராஜசேகரன், தற் காப்புக் கலை பயிற்சியாளர்கள் ஆர்.குமார், எம்.சிவசாமி கலந்து கொண்ட னர். காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்ற பயிற்சி வகுப்பில்,  மாணவ, மாணவிகள் 100 பேர் கலந்து கொண்டனர். பயிற்சியில் பங்கேற்ற வர்களுக்கு பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்பட்டது. 

சிபிஎம் சிறப்பு பேரவை

பெரம்பலூர், மே 23 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட சிறப்பு பேரவை ஞாயிறன்று பெரம்பலூர் துறைமங்கலத்திலுள்ள கட்சி அலுவல கத்தில் நடைபெற்றது. நகர செயலாளர் சு.சிவானந்தம் தலைமை வகித்தார். சிபிஎம் 23-வது அகில இந்திய மாநாட்டு தீர்மானங்கள் மற்றும் ஸ்தாபன  முடிவுகள் குறித்து மாநிலக்குழு உறுப்பினர் எம்.ஜெயசீலன் விளக்க உரை யாற்றினார். மாவட்ட செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். குன்னம் ஒன்றியத்தில் ஒன்றிய செயலாளர் வி. செல்லமுத்து தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு முடிவுகள் குறித்து மாவட்ட செயலாளர் பி.ரமேஷ் மற்றும் மாநிலக்குழு உறுப்பினர் சாமி.நடரா ஜன் விளக்க உரையாற்றினர். வேப்பந்தட்டை ஒன்றியத்தில் வட்ட செயலாளர் ஆர்.கோகுலகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்டக்குழு முடிவு கள் குறித்து ஏ.கே.ராஜேந்திரன் மற்றும் மாநிலக்குழு உறுப்பினர் டி.ரவீந்தி ரன் விளக்க உரையாற்றினர். ஆலத்தூர் ஒன்றியத்தில் ஒன்றிய செயலாளர்  எம்.செல்லதுரை தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எ.ரெங்கநாதன் கொடியேற்றி துவக்கி வைத்தார். மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.ராஜா விளக்க உரையாற்றினார். இடைக்குழு, மத்திய தர வர்க்க கட்சி உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஏரி, குளங்களில் வண்டல் மண் எடுக்க விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர்

திருச்சிராப்பள்ளி, மே 23 - திருச்சி மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களில் இருந்து வண்டல் மண், சவுடு  மண், களிமண் ஆகியவற்றை இலவசமாக வெட்டி எடுத்து செல்ல விண்ணப்பங்கள்  மாவட்ட ஆட்சியரால் வரவேற்கப்படுகின்றன.  அதன்படி, பதிவு செய்யப்பட்ட மண்பாண்ட தொழிலாளர், பொதுமக்கள் சொந்த தேவைக்கு மற்றும் விவசாயத் தேவைக்கு களிமண், வண்டல் மண், சவுடு  மற்றும் கிராவல் ஆகியவற்றை தூர்வாரும்  நோக்கில் மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட் டுள்ள ஏரி, குளம் மற்றும் குட்டைகளில் இருந்து விவசாயத் தேவைக்கு வண்டல் மண், களிமண் நன்செய் நிலத்திற்கு ஒரு ஏக்க ருக்கு 75 கனமீட்டர் (25 டிராக்டர்), ஒரு  ஹெக்டேருக்கு 185 கனமீட்டர், புன்செய் நிலத்திற்கு ஒரு ஏக்கருக்கு 90 கனமீட்டர் (30 டிராக்டர்) ஒரு ஹெக்டேருக்கு 222 கனமீட்டர் மற்றும் இதர சொந்த பயன்பாட்டுக்கு மண், சவுடு, கிராவல் ஆகியவை 30 கனமீட்டர் (10  டிராக்டர்) மற்றும் மண்பாண்டங்கள் செய்ப வர்களுக்கு 60 கனமீட்டர் (20 டிராக்டர்) ஆகிய  வகையில் கட்டணமின்றி மாவட்ட ஆட்சிய ரின் அனுமதி பெற்று எடுத்து செல்ல 20 நாட்க ளுக்கு மிகாமல் கீழ்க்கண்ட நிபந்தனைக்கு உட்பட்டு அனுமதி வழங்கப்படும்.  இதற்கு விண்ணப்பதாரரின் இருப்பிடம் அல்லது அவரது விவசாய நிலம், அதே வரு வாய் கிராமங்களில் அமைந்திருக்க வேண்டும். சிட்டா மற்றும் அடங்கல் நகல்களு டன் விண்ணப்பிக்க வேண்டும். மண்பாண்டங் கள் செய்வதற்கான களிமண் எடுக்க சம்பந்தப் பட்ட மண்பாண்ட தொழிலாளர் சங்கம் அல்லது கிராம நிர்வாக அதிகாரியின் சான்று டன் விண்ணப்பிக்க வேண்டும்.  விவசாயிகள், பயனாளிகள், விவசாயக் கூட்டமைப்புகள், அரசால் அங்கீகரிக்கப் ஆய்வகங்களில் ஏரி, குளம், குட்டைகளில் உள்ள கனிமத்தினை பகுப்பாய்வு செய்து மண் பரிசோதனை அறிக்கையை பெற வேண்டும். அனுமதி பெற்ற பயனாளிகள் மாவட்ட ஆட்சியரால் அங்கீகரிக்கப்பட்ட அலுவலரிடம் ஒப்பந்த பத்திரம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.  மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் உள்ள புவியியல் மற்றும்  சுரங்கத்துறை உதவி இயக்குநரை தொடர்பு  கொண்டு விவரங்களை பெற்றுக் கொள்ளலாம் என திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரி வித்துள்ளார்.

உவர்நீர் இறால் வளர்ப்பிற்கு மானியம்: விண்ணப்பங்கள் வரவேற்பு

தஞ்சாவூர், மே 23-  தமிழ்நாட்டில் இறால் உற்பத்தியினை அதிகரிக்கவும், புதிதாக இறால் பண்ணை தொழிலில் ஈடுபட விரும்புவோர் பயன்பெறும் வகையில், உவர்நீர் இறால் வளர்ப்பிற்காக புதிய  குளங்கள் அமைத்தல் மற்றும் உள்ளீடுகள் வழங்கும் திட்டம்  செயல்படுத்தப்படவுள்ளது. உவர்நீர் இறால் வளர்ப்பிற்காக புதிய குளங்கள் அமைத்தல் திட்டத்தில் 1 ஹெக்டேர் பரப்பிற்கு ஆகும் மொத்த  செலவினம் ரூ.8 லட்சத்தில் பொது பிரிவினருக்கு 40 விழுக்காடு  மானியமாக ரூ.3.20 லட்சமும், பெண்களுக்கு 60 விழுக்காடு  மானியமாக ரூ.4.80 லட்சம் வழங்கப்படும். மேலும், இக்குளங் களுக்கு இறால் வளர்க்க உள்ளீடுகள் வழங்கும் திட்டத்தில்  மொத்த செலவினம் ரூ.6 லட்சத்தில், பொது பிரிவினருக்கு 40  விழுக்காடு மானியமாக ரூ.2.40 லட்சம், பெண்களுக்கு 60  விழுக்காடு மானியமாக ரூ.3.60 லட்சம் வழங்கப்படும் என தெரி விக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு பொது பிரிவி னருக்கு 6 ஹெக்டேர் மற்றும் பெண்களுக்கு 2 ஹெக்டேர் என  மொத்தம் 8 ஹெக்டேர் இலக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டங்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் தகுதி மற்றும்  மூப்புநிலையின் அடிப்படையில் முன்னுரிமை அளித்து தேர்வு  செய்யப்படும். எனவே விண்ணப்பிக்க விரும்பும் இறால்  வளர்ப்பு விவசாயிகள் எண்.873/4, அறிஞர் அண்ணாசாலை, கீழவாசல், தஞ்சாவூர் என்ற முகவரியில் இயங்கும், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட  ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

ஒப்பந்த அடிப்படையில்  கால்நடை மருத்துவ ஆலோசகர் பணி

தஞ்சாவூர், மே 23-  தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தி யாளர்கள் ஒன்றியத்தின் மூலம் கிராமப்புற விவசாயி களின் கறவைகளுக்கு மருத்துவ வசதி கிடைத்திட வும், ஆவின் பால் உற்பத்தியை அதிகரிக்கவும் தமிழக அரசு பல்வேறு திட்டங் களை செயல்படுத்தி வரு கிறது.  தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் வாயிலாக, புதிய கால்நடை மருத்துவ தடங்கள் அமைக் கப்பட்டுள்ளன. தற்பொழுது காலியாக உள்ள இரண்டு  கால்நடை மருத்துவ ஆலோ சகர் பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணிபுரிய, விருப்பம் உள்ள கால்நடை  மருத்துவப் பட்டதாரிகள், தங்கள் உரிய பட்டப்படிப்பு,  கால்நடை மருத்துவ கவுன் சில் சான்றிதழ்களுடன், ஜூன்  2 (வியாழன்) காலை 11  மணிக்கு தஞ்சாவூர் நாஞ்சி கோட்டை சாலையிலுள்ள ஆவின் தலைமை இடத்தில், நேரடியாக நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம்.  மேலும், 8122665578 என்ற கைப்பேசி எண்ணிலோ, www.thanjavur.nic.in  இணையதளத்தின் வாயிலா கவும் விவரங்களை அறிந்து கொள்ளலாம் என மாவட்ட தினேஷ் பொன்ராஜ் ஆலி வர் தெரிவித்துள்ளார்.

குறுவை சாகுபடியில் அதிக மகசூல் பெற விதை பரிசோதனை செய்ய அறிவுறுத்தல்

திருச்சிராப்பள்ளி,  மே 23 - திருச்சி விதை பரிசோதனை நிலைய அலுவலர் மனோன்மணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருச்சி மாவட்டத்தில் நெல், சோளம், கம்பு, மக்காசோளம், பயறு வகை பயிர்கள், பருத்தி மற்றும் எண்ணெய்வித்து பயிர்களான எள், கடலை அதிகமான பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.  தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கரூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் பாசன நீர் தட்டுப்பாடு இல்லாத இடங்களில் குறுவை நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இப்பருவத்தில் அதிக விளைச்சலும் கிடைக்கிறது. குறுவை சாகுபடியில் அதிக மகசூல் பெற்றிட குறுவை பட்டத்திற்கான நெல் ரகங்களான ஏடீடி -36. ஏடீடி-37, ஏடீடி-43, ஏடீடி - 45, ஏஎஸ்டி-16, ஏஎஸ்டி-18, கோ51 மற்றும் டிபிஎஸ் -5 ஆகிய ரகங்களில் பகுதிக்கு ஏற்றவாறு ரகங்களை தேர்வு செய்து விதையின் தரம் அறிந்து விதைப்பது அவசியம். எனவே, திருச்சி மாவட்ட விவசாயிகள் குறுவையில் அதிக மகசூலும் அதிக லாபமும் பெறவும், விதைக்கான இடுபொருள் செலவினைக் குறைக்கவும், தங்களிடம் உள்ள விதைகளை விதை மாதிரி ஒன்றுக்கு ரூ.80 ஆய்வுக் கட்டணமாக செலுத்தி திருச்சி காஜாமலை அரசு பல்துறை கட்டிட வளாகத்திற்குள் செயல்பட்டு வரும் விதைப் பரிசோதனை நிலையத்தில் பரிசோதனை செய்து விதையின் தரம் அறிந்து விதைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயண மையமாக திருக்காக்கரை மாற்றப்படும் தேர்தல் அறிக்கை வெளியிட்டார் இ.பி.ஜெயராஜன்

கொச்சி, மே 23- கே ரயில், மெட்ரோ மற்றும் தேசிய நெடுஞ்சாலையின் சந்திப்பு இடமான திருக்காக்கரை பயண மையமாக மாற்  றப்படும் என்று எல்.டி.எப் ஒருங்கிணைப்பா ளர் ஈ.பி.ஜெயராஜன் தெரிவித்தார். திருக்காக்கரை தொகுதி எல்டிஎப் தேர் தல் அறிக்கையை வெளியிட்டு பேசிய அவர், மெட்ரோ ரயில் விரிவாக்கத்துடன், பல்வேறு போக்குவரத்து வழிமுறைகள் ஏற்படுத்தப்படும். இதன் மூலம் போக்கு வரத்து நெரிசல் தவிர்க்கப்படும். உலகை யே ஈர்க்கும் நகரமாக திருக்காக்கரை மாற்றப்படும் என்றார். தகவல் தொழில்நுட்பத் திறனைப் பயன்  படுத்தி அதிக வேலை வாய்ப்புகள் உரு வாக்கப்படும். வறுமை அகற்றப்படுவது டன், தொகுதியில் உள்ள அனைவருக்கும் வீடு வழங்கப்படும். நிலப்பட்டா பெறாத வர்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். குசாட் உள்ளிட்ட கல்வி நிறு வனங்கள் சர்வதேச தரத்திற்கு மேம் படுத்தப்படும். ஹரித (பசுமை) கேரளத்தின் முக்கிய வசீகர நகரமாக திருக்காகரை விளங்கும். கழிவுகளை அகற்றுவதோடு,  அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்  கப்படும். வெள்ளப்பெருக்கை தடுக்க தொழில்நுட்பத்தின் உதவியுடன் அறிவியல்  முறைகள் பின்பற்றப்படும். வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்க ளுக்கு சமையல் எரிவாயு வழங்க ஏற்பாடு செய்யப்படும். திருக்காக்கரையில் சர்வ தேச தரத்திலான மைதானம் அமைக்கப் படும். இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் பயன்பெறும் வகையில் ஊராட்சி அள விலான விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்படும். பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். விவசாயத் துறை மேம்படும். கேரளாவின் வளர்ச்சியுடன், திருக்காக்கரையின் வளர்ச்சிக்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும். யு.டி.எப். ஆட்சியில் திருக்காக்கரை நகாராட்சியும் தொகுதியும் பல ஆண்டுகளாக வளர்ச்சி யில் தேங்கி கிடக்கிறது. மேலும், மாநில அரசு செயல்படுத்தும் திட்டங்களை செயல்  படுத்தாததால், திருக்காக்கரை தொற்று நோய்களின் புகலிடமாக மாறியுள்ளது என்றார். நிகழ்ச்சிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலர் பி.ராஜூ தலைமை வகித்தார். அமைச்சர் பி.ராஜீவ், எல்.டி.எப். தொகுதிச் செயலர் எம்.சுவராஜ், எல்.டி.எப். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜார்ஜ் எடப் பாடி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் டி.பி.ராம கிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் ஜோஸ்  தெற்றயில், காங்கிரஸ் (பி) மாவட்டத் தலை வர் பால் வர்கீஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அகில இந்திய கூடைப்பந்துப் போட்டி: சென்னை விளையாட்டு விடுதி அணி முதலிடம்

தேனி, மே 23- பெரியகுளத்தில் நடந்த அகில இந்திய கூடைப்பந்துப் போட்டியில் சென்னை விளையாட்டு விடுதி அணி முதலிடத்தைப் பிடித்தது. தேனி மாவட்டம் பெரியகுளத்தில், சிதம்பர சூரியநாராயணன் நினைவு கோப் பைக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டி கடந்த 15 ஆம் தேதி தொடங்கியது. இந்தியாவின் புகழ்பெற்ற 23 அணிகள் பங்கேற்றன. நாக்அவுட் முறையில் போட்டிகள் நடைபெற்றது. இறுதிச்சுற்றின் முதல்போட்டியில் டேராடூன் ஓ.என்.ஜி.சி.அணியும், பெங்களூரூ பாங்க் ஆப் பரோடா அணியும் களமிறங்கின. இதில் 88:67 என்ற புள்ளிக்கண கில் டேராடூன் அணி வென்றது. இரண்டாம் போட்டியில் புதுதில்லி விமானப்படை அணி, சென்னை விளையாட்டு விடுதி அணிகள் மோதின. இதில் 87:83 புள்ளிக்கணக்கில் சென்னை அணி வெற்றிபெற்று சாம்பியன் பட்டம் பெற்றது. புள்ளிகள் அடிப்படையில் சென்னை விளையாட்டு விடுதி அணி, டேராடூன் ஓஎன்ஜிசி.அணி, இந்திய விமானப்படை அணி, பெங்களூரூ பாங்க் ஆப் பரோடா அணிகள் முதல் நான்கு இடங்களை பெற்றது. ஆட்சியர் க.வீ.முரளீதரன் தலைமையில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. கூட்டு றவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி விளை யாட்டு வீரர்களுக்கு பரிசுகளை வழங்கினார். பத்மஸ்ரீ விருது பெற்ற இந்திய கூடைப் பந்து வீராங்கனை அனிதா பால்துரை சிறப்புவிருந்தினராக கலந்து கொண்டார். இதில் பி.டி. சிதம்பர சூரியநாராயணன் நினைவாக முதல் பரிசு ரூ 50 ஆயிரம் மற்றும் சுழற்கோப்பை சென்னை விளையாட்டு விடுதி அணிக்கு வழங்கப்பட்டது. அடுத்தடுத்து வெற்றி பெற்ற அணிகளுக்கு தலா ரூ.40 ஆயிரம், ரூ.30 ஆயிரம், ரூ.20 ஆயிரம் வழங்கப்பட்டது. சிறந்த விளையாட்டு வீரராக சென்னை விளையாட்டு விடுதி அணியைச் சேர்ந்த கார்த்திக் தேர்வு செய்யப்பட்டு, அவருக்கு இருசக்கர வாகனம் வழங்கப்பட்டது. சிறந்த நன்னடத்தை அணியான ஆட்லரி சென்டர் ஹைதராபாத் அணிக்கு ரூ.8 ஆயிரம் வழங்கப்பட்டது. சிறந்த உள்ளூர் விளையாட்டு வீரர் பெரியகுளம் சில்வர் ஜூப்ளி விளையாட்டுக்கழகத்தைச் சேர்ந்த சூரியபாலனுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை. சில்வர் ஜூப்ளி விளையாட்டு கழக தலைவர் அமர்நாத். செயலாளர் சூரியவேலு, பொருளாளர் டாக்டர் செல்வராஜ் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.