districts

img

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து சிபிஎம் சார்பில் ஆர்ப்பாட்டம்

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்தும் திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் துப்புரவு பணி முழுவதையும் தனியாருக்கு காண்ட்ராக்ட் விடுவதைக் கைவிட வேண்டும். ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை சீர்கேடுகளைச் சரி செய்ய வேண்டுமென வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஸ்ரீரங்கத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பகுதிச் செயலாளர் தர்மா தலைமை தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில குழு உறுப்பினர் ஸ்ரீதர், மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா, சந்தானம், வீரமுத்து, சுப்ரமணி, கோவிந்தன், ரகுபதி, வெற்றிவேல், சந்துரு, இளங்கோவன், விஜயலட்சுமி சீனிவாசன் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.