ஆளுநர் வருகையை கண்டித்து இன்று திருவாரூரில் ஆர்ப்பாட்டம்
திருவாரூர், ஜன.27 - திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க ஜனவரி 28 அன்று வருகை தரும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை கண்டித்து, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடை பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு உரிமைகளுக்கு எதிராக தொடர்ந்து செயல்படும் தமிழக ஆளுநர் ரவியை, தமிழ்நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என வலி யுறுத்தி ஜனவரி 28 அன்று திருவா ரூர் விருந்தினர் மாளிகை அருகே கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடை பெறும். தேசத்தை நேசிக்கும் அனைத்து மக்களும், மதச்சார்பற்ற அனைத்து அரசியல் இயக்கங்களும் இதில் கலந்து கொள்ள வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தர மூர்த்தி செய்தியாளர்கள் சந்திப்பின் போது தெரிவித்தார். அப்போது, சிபிஐ மாவட்டச் செயலாளர் வை.செல்வராஜ் உள்ளிட் டோர் உடனிருந்தனர்.
தரமற்று போடப்பட்ட தார்ச்சாலை: கொத்தங்குடி மக்கள் புகார்
கும்பகோணம், ஜன.27- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஒன்றியம் கொத்தங்குடி ஊராட்சி 7 ஆவது வார்டில் சுமார் 150 மீட்டருக்கு ஊராட்சி 15 ஆவது நிதி குழு திட்டத்தின் கீழ், ரூ.4.20 லட்சம் மதிப்பீட்டில் தார்ச்சாலை அமைக்க டெண்டர் விடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தார்ச்சாலை போடுவதற்கு விதிமுறைகளின்படி கருங்கல் ஜல்லி பெரிய அளவுள்ள கல்லை போட்டு, மேலே கிராவல் ஜல்லி என்று சொல்லப்படும் ஒருவகை செம்மண்ணை போட்டு தரப்படுத்தி, அதற்கு மேல் தார் கலவையான தார் ஜல்லியை கலந்து சாலை போடு வது வழக்கம். ஆனால் கொத்தங்குடி ஊராட்சி 7 ஆவது வார்டில் விதிமுறை களை மீறி, கிராவல் மண்ணை கொட்டி மேலே சிறிய ரக ஜல்லியை தார் இல்லாமல் பரப்பி தரமற்ற சாலையை போட்டுள்ளனர். இதையறிந்து சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர் நாகராஜன் மற்றும் ஊர் மக்கள், கும்பகோணம் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமாரிடம் புகார் அளித்து, மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தப் போவதாக தெரிவித்தனர். இந்நிலையில் சம்பந்தப்பட்ட சாலையை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்கள், தரமற்று போடப்பட்டுள்ள சாலையை காண்பித்து முறையிட்டனர். பின்பு, கொத்தங்குடி ஊராட்சி மன்றத் தலைவர் ராஜலட்சுமியின் கணவர் வீரபாண்டியன் சாலை போடுவதற் கான ஒப்பந்தத்தை செய்துள்ளார் என்பது தெரிய வந்தது. ஆனால் அவர் தரமற்ற சாலையை போட்டுள்ளார். இதனால் பொது மக்கள் எங்களுக்கு தரமான சாலையை அமைத்து தர வேண்டும் என அதி காரியிடம் முறையிட்டனர். இந்நிலையில் தரமான தார் மற்றும் கருங்கல்லை கொண்டு சாலை அமைக்கப்படும் என அந்த ஒப்பந்தக்காரர் தெரிவித் தார்.
போக்சோவில் வாலிபர் கைது
அரியலூர், ஜன.27- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மேலசம்போடை கிராமத்தைச் சேர்ந்தவர் அன்புதுரை (21). இவர் சிறுமி ஒருவரை காத லிப்பதாக கூறி கடந்த 2020 ஆம் ஆண்டு கட்டா யப்படுத்தி பாலியல் வன் கொடுமை செய்துள் ளார். மேலும், சிறுமியின் வீட்டிற்கு ஆள் இல்லாத போது சென்று பலமுறை வன்கொடுமை செய்துள் ளார். தற்போது அந்த சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இது குறித்து அன்புதுரை யிடம் திருமணம் செய்து கொள்ள கேட்டபோது, சாதியை காரணம் காட்டி மறுத்துவிட்டார். இது குறித்து அந்த சிறுமி ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல் ஆய்வாளர் சுமதி விசாரணை நடத்தி, அன்பு துரையை போக்சோ சட்டத் தில் கைது செய்தார்.
கண் பரிசோதனை முகாம்
தஞ்சாவூர், ஜன.27- தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில், லயன்ஸ் சங்கம், பன் னாட்டு தொழிலதிபர் அப்துல் மஜீத், மதுரை அரவிந்த் கண் மருத்து வமனை இணைந்து கண் பரிசோதனை முகாமை நடத்தின. லயன்ஸ் சங்க தலை வர் குப்பாஷா அகமது கபீர் தலைமை வகித் தார். செயலாளர் ஹாஜா நசூருதீன் வரவேற்றார். பட்டுக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் கா. அண்ணாதுரை கண் பரி சோதனை முகாமை தொ டங்கி வைத்தார். முகா மில், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்கள், பொது மக்களை பரிசோதித்தனர். இதில் 275 பேர் கலந்து கொண்டதில், 75 பே ருக்கு கண்புரை இருப்பது கண்டறியப்பட்டு அறுவை சிகிச்சைக்காக மதுரை அழைத்துச் செல்லப்பட் டனர்.
தொடக்கப் பள்ளிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆயுள் காப்பீட்டு நிறுவனம்
திருச்சிராப்பள்ளி, ஜன.27 - ஆயுள் காப்பீட்டு நிறுவனம் திருச்சி-1 கிளையில் பணியாற்றும் ஊழியர்கள் சார்பில், சீராத்தோப்பு அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. விழாவிற்கு அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க தஞ்சைக் கோட்டத் தலைவர் எஸ்.செல்வராஜ் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் வி.சேதுராமன், ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு பயன்படும் வகை யில் ரூ.1,40,000 மதிப்புள்ள வட்ட மேஜைகள், சிறிய நாற்காலிகள், ஸ்டீல் பெஞ்ச் ஆகிய வற்றை வழங்கினார். நலச்சங்க ஊழியர்கள், வட்டாரக் கல்வி அலுவலர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
அம்மாப்பேட்டை தஞ்சையுடன் இணைந்திருக்க வேண்டும்
கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் பாபநாசம், ஜன.27- தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே சாலியமங்கத்தில் நடந்த கிராம சபைக் கூட்டத்திற்கு, ஊராட்சித் தலைவர் சக்தி சிவ குமார் தலைமை வகித்தார். ஊராட்சி ஒன்றி யத் தலைவர் கலைச்செல்வன், ஒப்பந்த தாரர் சன்.சரவணன் உட்பட பலர் பங்கேற்ற னர். இதில் அம்மாப்பேட்டை ஒன்றியம் தஞ்சாவூர் மாவட்டத்துடன் தொடர்ந்து இணைந்திருக்க தீர்மானம் நிறைவேறியது. ரெகுநாதபுரத்தில் நடந்த கிராம சபைக் கூட்டத்திற்கு ஊராட்சித் தலைவர் ஜெய் சங்கர் தலைமை வகித்தார். ரெகுநாதபுரம் அருகே குடியிருப்பு, அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும். ரெகுநாதபுரம் - அக்கரை ரெகுநாதபுரத்தை இணைக்கும் வகையில் குடமுருட்டி ஆற்றில் பாலம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங் கள் நிறைவேறின. ராராமுத்திரைக் கோட்டையில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சித் தலை வர் சோழன் தலைமை வகித்தார். அம்மா பேட்டை ஒன்றியம் தஞ்சாவூர் மாவட்டத்து டன் தொடர்ந்து இணைந்திருக்க வேண்டு மென தீர்மானம் நிறைவேறியது.
நெல் விதை விற்பனையில் விதி மீறினால் கடும் நடவடிக்கை
தஞ்சாவூர், ஜன.27- நெல் விதை விற்பனையில் விதிமீறல்கள் இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தஞ்சாவூர் மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குநர் விநாயக மூர்த்தி தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், கோடை நெல் சாகுபடியை விவசாயிகள் தொடங்கியுள்ள நிலை யில், தனியார் விதை விற்பனையாளர்கள் குறுகிய கால நெல் ரகங்களான ஏடிடீ 36, ஏடிடீ 37, ஏடிடீ 43, ஏடிடீ 45, ஏடிடீ 53, ஏடிடீ57, கோ 51, ஏஎஸ்டி 16, டிபிஎஸ் 5 போன்ற கோடை பருவத்துக்கு ஏற்ற ரகங்களை மட்டுமே விற்க வேண்டும். தனியார் விதை விற்பனையாளர்கள் தரமான நெல் ரகங்களின் விதைகளைக் கொள்முதல் செய்து, விவசாயி களுக்கு விதை சட்ட விதிகளின்படி விற்க வேண்டும். தஞ்சா வூர், கும்பகோணம் மற்றும் பட்டுக்கோட்டை பகுதிகளில் விதை ஆய்வாளர்களால், அரசு வேளாண்மை விரிவாக்க மையங்கள் மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங் களில் கோடை நெல் சாகுபடிக்கு கொள்முதல் செய்து இருப்பு வைக்கப்பட்டுள்ள நெல் குவியல்களில் அலுவலக மாதிரி கள் சேகரிக்கப்படுகிறது. இந்த மாதிரிகள் தஞ்சாவூர் காட்டுத் தோட்டத்தில் செயல்படும் விதை பரிசோதனை நிலையத்துக்கு முளைப்புத் திறன் குறித்த ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தனியார் விதை விற்பனையாளர்கள் விதைகளை விற்பனை செய்யும்போது விவசாயிகளுக்கு கட்டாயம் ரசீது வழங்க வேண்டும். விற்பனை ரசீதில் விவசாயி மற்றும் குவியல் விவரங்களை அவசியம் குறிப்பிட வேண்டும். கோடை பருவத்துக்கு உகந்தது அல்லாத நெல் ரகங்களை விற்பனை செய்தாலோ அல்லது விற்பனையில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டாலோ தொடர்புடையவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.