districts

img

நூறுநாள் வேலைத் திட்டம் நிறுத்தம்: ஒன்றிய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், மார்ச் 7-  நூறுநாள் வேலையை திடீரென நிறுத்திய மாவட்ட நிர்வாகத்தை கண் டித்தும், வேலைக்கான சம்பளத்தை வழங் காமல், பல மாதங்களாக நிலுவையில் வைத்து, வறுமையில் வாடும் ஏழை மக்களை வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்தும், தேர்தல் பத்தி ரம் என்ற பெயரில், நிதி மோசடியில் ஒன்றிய  பாஜக அரசுக்கு துணை போகும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா நிர்வாகத்தைக் கண்டித் தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் நான்கு ரோட்டில், கட்சியின் ஒன்றியச் செயலாளர் சி. பாஸ்கர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. சிபிஎம் மாவட்டச் செயற் குழு உறுப்பினர்கள் என்.வி.கண்ணன், எஸ். தமிழ்ச்செல்வி ஆகியோர் கண்டன உரை யாற்றினர். ஒன்றியக்குழு உறுப்பினர் ராஜ கோபால் மற்றும் கிளைச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.