districts

img

இளைஞர்களுக்கு தொழில் துவங்க வங்கிக்கடன் வழங்குக! திருவாரூரில் வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருவாரூர்,நவ.9- திருவாரூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் அமைப்பு தினத்தை முன்னிட்டு பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி நவம்பர்  9 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ஏ.கே.வேல வன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர்  எம்.எஸ்.ஜெய்கிஷ், பொரு ளாளர் எம்.டி.கேசவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாவட்டச் செயலாளர் பி.கந்தசாமி துவக்கி வைத்துப் பேசினார். மாநிலச் செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன் நிறைவுரையாற்றினார். இதில் மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் பா.ஆனந்த்,  தலைவர் ப.சுர்ஜித் மற்றும் வாலிபர் சங்க மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் உட்பட நூற்றுக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்றனர். படித்த இளைஞர்களுக்கு தொழில் துவங்குவதற்கு வங்கிகளில் கடன் வழங்க வேண்டும். கடன் கொடுக்க வங்கிகள் மறுப்பதில்,  தலையிட்டு கடன் வழங்குவதை உத்தர வாதப்படுத்த வேண்டும். திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சீர்கேட்டை நிர்வாகம் உடனே சீர் செய்ய வேண்டும்.நோயாளிகள் உடன் வருபவர்கள் தங்குவதற்கு அமைக்கப்பட்ட தங்கும் விடுதியை உடனடியாக திறக்க வேண்டும்.  திருவாரூர் புதிய பேருந்து நிலையத்திற்கு  உள்ளே-வெளியே செல்லும் சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என்று பேசிய தலைவர்கள் வலி யுறுத்தினர்.