தஞ்சாவூர், ஜன.6- விடுமுறை நாட்களிலும் பணியாற்ற நிர்ப்பந்திக்க கூடாது என கிராம நிர்வாக அலுவலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
டிஜிட்டல் கிராப் சர்வே பணி குறித்தும், அது சம்பந்தமாக கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கொடுக் கப்படும் முறையற்ற அழுத் தத்தை கைவிடவும் வேண் டும். விடுமுறை நாட்களி லும் கிராம நிர்வாக அலுவ லர்களை பணி செய்ய நிர்ப்பந் தம் செய்யக் கூடாது என வலி யுறுத்தி, தமிழ்நாடு அனைத்து கிராம நிர்வாக அலுவலர் சங்கங்களின் கூட்ட மைப்பு சார்பில், பேரா வூரணி வட்டாட்சியர் அலுவ லகம் முன்பு வெள்ளிக் கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பு நிர்வாகி செல் வம் தலைமை வகித்தார். ரவிச்சந்திரன் கோரிக்கை விளக்க உரையாற்றினார். இதேபோல் தஞ்சாவூர், பட்டுக்கோட்டை உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரியலூர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வட்டாட் சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க வட்டத் தலைவர் மணிமா றன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பாக்ய ராஜ் கோரிக்கைகளை வலி யுறுத்தி கண்டன உரையாற் றினார்.