திருச்சிராப்பள்ளி, டிச.12 - கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி ஓய்வூதியர்கள் கண்ணில் கருப்புத் துணிக் கட்டி ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். தமிழக முதலமைச்சர் சட்டமன்ற தேர்தலின் போது அரசு ஊழியர், ஆசிரியர், ஓய்வூதியர், சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை நடை முறைப்படுத்த வேண்டும். 70 வயதை கடந்த ஓய்வூதியர் களுக்கு கூடுதல் ஓய்வூதியம் 10 சத வீதம் வழங்க வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள், வருவாய் கிராம ஊழியர்கள், ஊராட்சி செயலா ளர்கள், பட்டு வளர்ச்சித் துறை தற்கா லிக ஊழியர்கள் மற்றும் வனத்துறை பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக் கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7850 வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படும் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் உள்ள குளறுபடிகளை சரி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தி னர் கண்களில் கருப்புத் துணி கட்டி செவ்வாயன்று இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவல கம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் சிராஜுதீன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாநிலச் செயலாளர் செந்தமிழ்செல் வன், வட்டக்கிளை செயலாளர்கள் ஆகி யோர் பேசினர். மாவட்டச் செயலாளர் மதிவாணன் நன்றி கூறினார். அரியலூர் அரியலூர் அண்ணாசிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் முன்னாள் மாவட்ட துணைத் தலைவர் சி.பி.ராஜா தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலர் எம்.கே.ஷேக் தாவூத், மாவட்டச் செய லர் மூ.மகாலிங்கம் ஆகியோர் கோரிக்கை விளக்கவுரையாற்றினர்.