திருச்சிராப்பள்ளி, அக்.30 - ஹரியானா, பஞ்சாப், மணிப்பூர், ஒரிசா, சிக்கிம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியில் பணியாற்றும் பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ள னர். இதேபோல் தமிழ் நாட்டிலும் பணிநிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். இந்த ஆண்டிற்கான ஊதிய உயர்வை ரூ.35 ஆயிரம் என மறுநிர்ணயம் செய்ய வேண்டும். காலிப் பணியிடங்களில் பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும். விருப்பப்படி பணி மாறுதல் வழங்க வேண்டும். குடும்பநல பாதுகாப்பு நிதி யாக ரூ.10 லட்சம் வழங்க வேண்டும். இஎஸ்ஐ, புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத் தில் இணைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஒருங் கிணைந்த பள்ளிக்கல்வி அனைத்து தொகுப்பூதிய ஊழியர்கள் சங்கம் சார்பில் திங்களன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாநிலத் தலைவர் பிரிட்டோ தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாநில பொதுச் செயலாளர் பெரியசாமி துவக்கவுரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி அனைத்து தொகுப்பூதிய ஊழியர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் கோதண்டபாணி, அரசு ஊழியர் சங்க மாவட் டத் தலைவர் பால்பாண்டி, மாவட்டச் செயலாளர் பழனிச்சாமி, தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக ஊழியர் சங்க மாநில பொதுச் செயலாளர் ஜெயராம், மாவட்டத் தலைவர் வெங்க டேஷ்பாபு ஆகியோர் பேசி னர். அரசு ஊழியர் சங்க மாநில பொதுச் செயலா ளர் செல்வம் நிறைவுரை யாற்றினார். முன்னதாக சங்க மாநில துணைத் தலை வர் விஜயலெட்சுமி வரவேற் றார். மாநில பொருளாளர் மகாலிங்கம் நன்றி கூறி னார்.