அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு ஜிஎஸ்டி விதித்த ஒன்றிய அரசை கண்டித்து கரூர் மாவட்டத்தில் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கரூர் ஆர்எம்எஸ் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொமுச மாவட்ட தலைவர் அண்ணவேலு தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.முருகேசன் சிறப்புரையாற்றினார்.