ஈரோடு, நவ.29- சாலை வரி உயர்வை ரத்து செய்ய வேண் டும் என வலியுறுத்தி சிஐடியு சாலை போக்கு வரத்து தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். பழைய பயணிகள் வாகனம் மற்றும் சரக்கு வாகனங்களுக்கு ஏற்கனவே இருந்த காலாண்டு வரி வசூலிக்க வேண்டும். ஆயுள் கால சாலை வரி முறையை ரத்து செய்ய வேண்டும். ஆன்லைன் அபராத முறையைக் கைவிட வேண்டும். 2019 மோட்டார் வாகன சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தி னர் ஈரோடு - கரூர் சாலையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத் திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ். தனபால் தலைமை வகித்தார். சிஐடியு மாவட் டச் செயலாளர் எச்.ஸ்ரீராம், சாலை போக்கு வரத்து தொழிலாளர் சங்க மாவட்ட பொதுச் செயலாளர் பி.கனகராஜ் ஆகியோர் சிறப்பு ரையாற்றினர். இதில் அரசு போக்குவரத்து ஊழியர் சங் கத்தின் மண்டலத் தலைவர் கே.மாரப்பன், உழைக்கும் மக்கள் தொழிற்சங்க செயலா ளர் சி.முருகேசன், ஆட்டோ சங்க மாவட்ட பொதுச்செயலாளர் கண்மணி, கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலா ளர் எஸ்.மாதவன், அரசு போக்குவரத்து ஓய்வு பெற்றோர் சங்கத்தின் மண்டலச் செயலா ளர் எஸ்.ஜெயராமன், பீடி, சுருட்டு தொழிலா ளர் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.செந்தில் குமார், மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதி கள் சங்க செயலாளர் மு.சங்கரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக, சங்கத்தின் உதவித்தலைவர் மா.ரவி நன்றி கூறினார்.