நாமக்கல் மே 12- நீர்நிலைகள், ஓடைகளை மறைத்து வரைப்படம் தயாரித்து, அரசுக்கு தவ றான தகவல்களை கொடுத்து சிப்காட் அமைக்க முயற்சி செய்யும் வருவாய்த் துறையை கண்டித்து வளையபட்டியில் சிப்காட் எதிர்ப்பு குழுவினர் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், வளையபட்டி, அரூர், பரளி, என்.புதுப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 820 ஏக்கரில் சிப்காட் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதற் கான முயற்சியில் நாமக்கல் மாவட்ட நிர் வாகம் நிலம் கையகப்படுத்தும் பணி யில் ஈடுபட்டு வருகிறது. இந்த சிப்காட் திட்டத்தை எதிர்த்து சிப்காட் எதிர்ப்பு குழுவினர், விவசாயிகள், விவசாய முன் னேற்றக் கழகத்தினர் பல்வேறு போரட் டங்களை நடத்தி வருகின்றனர். இந்நி லையில், சிப்காட் அமைக்கப்பட உள்ள நிலத்தில் இருக்கும் ஓடைகள், ஏரிகள், குளங்கள், நீரோடைகளை இத்திட்டத் திற்கான வரைப்படத்தில் மறைத்து அரசுக்கு தவறான தகவல்களை வரு வாய்த்துறையினர் அனுப்பியுள்ளனர். இதனை கண்டித்தும், சிப்காட் திட் டத்தை நிறைவேற்ற செய்யும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் வளையபட் டியில் உள்ள நீர்நிலை ஓடைகள் முன்பு விவசாயிகள், சிப்காட் எதிர்ப்பு குழுவி னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப ரப்பை ஏற்படுத்தியுள்ளது.