சேலம், மார்ச் 18- பெரியார் பல்கலைக்கழகத்தில் அருந்ததியர் மக்களின் உள் ஒதுக்கீட்டை பொதுப்பட்டியலுக்கு மாற்றி, பணி நியம னங்கள் வழங்கியதை கண்டித்து தலித் விடுதலை இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பதிவாளர் ஆகியோர், அருந்ததியர் சமூக மக்களின் உள்ஒ துக்கீட்டனை, திட்டமிட்டு பொதுப்பட்டியலுக்கு மாற்றி பணி நியமனங்கள் வழங்கியுள்ளனர். இதனைக் கண்டித்து தலித் விடுதலை இயக்கம் சார்பில், பல்கலைக்கழக நுழை வாயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட் டத்திற்கு தலித் விடுதலை இயக்கத்தின் மாநிலத் தலைவர் ச.கருப்பையா தலைமை வகித்தார். இதில் அமைப்பின் மாவட்டத் தலைவர் மணிகன்டன், மாவட்டச் செயலாளர் இளையராசா, அருந்ததியர் மக்கள் இயக்கத்தின் மாநிலத் தலைவர் பிரதாபன், அம்பேத்கர் மக்கள் இயக்க மாவட்ட துணைத்தலைவர் ராம்ஜீ, தேசிய அம்பேத்கர் கட்சி ஒன்றியச் செயலாளர் ஆ.ராசேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.